வாங்கிய கடனை ஒரு நாளுக்குக் கொடுக்க வேண்டிய இக்கட்டான தருணத்தில் இருக்கிறார் நாயகன் ஜி.வி.பிரகாஷ். விடிந்தால், காதலியுடன் நிச்சயதார்த்தம் என்ற கூடுதல் நெருக்கடியில் இருக்கும் ஜி.வி.பி., ஒரு பங்களாவுக்குள் திருடச் செல்கிறார். அந்த பங்களாவை காவல் காக்கும் நாயிடம் மாட்டிக்கொள்கிறார் ஜி.வி.பி. ஆனால், அந்த நாயோ அவரை வெளியே செல்ல விடாமல் வீட்டுக்குள் துரத்துகிறது. பங்களாவில் நுழையும் ஜி.வி.பி.க்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த பங்களாவில் வசிக்கும் முன்னாள் போலீஸ் அதிகாரியான சுமனை கொல்ல தீவிரவாதிகள் முயற்சி செய்கிறார்கள். சுமனோடு சேர்ந்து ஜி.வி.பி. என்ன செய்கிறார் என்பதுதான் ‘வாட்ச்மேன்’ படத்தின் கதை.
ஒரு நாள் இரவில் ஒரு வீட்டில் நடக்கும் சம்பவங்களை நகர்த்தி செல்வது என்பது எளிதான விஷயம் கிடையாது. ஆனால், இயக்குநர் விஜய் அதற்காக மெனக்கெட்டிருக்கிறார். ஒரு திடீர் திருடனுக்கு நேரும் எதிர்பாராத அதிர்ச்சியை சுவாரசியம் குறையாமல் காட்ட இயக்குநர் முயற்சி செய்திருக்கிறார். திருடப் போகும் இடத்தில் நாயிடம் மாட்டிக்கொள்ளும்போது அடுத்து என்ன ஆகுமோ என்ற பதற்றம் நாயகனை போல பார்வையாளர்களுக்கும் தொற்றிக்கொள்கிறது. ஆனால், பங்களாவுக்குள் தீவிரவாதிகள் நடத்தும் துப்பாக்கிச் சண்டை வீடியோ கேம்ஸ் போல மாறி காட்சியின் மீதான எதிர்பார்ப்பை குறைத்துவிடுகிறது.
ஒரு குறிப்பிட்ட பங்களாவுக்குள் திருட செல்ல ஜி.வி.பி. எடுக்கும் முடிவுக்கான காரணத்தை இயக்குநர் சரியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆனால், இந்த சிசிடிவி யுகத்தில் சர்வ சாதாரணமாகத் திருடச் செல்லுவது சாத்தியமா என்பதைக் கவனிக்க இயக்குநர் மறந்துவிட்டார்.
பெரிய துப்பாக்கிகளுடன் வீட்டைச் சுற்றி சுமனை தேடுகிறார்கள் தீவிரவாதிகள். ஆனால், விட்டலாச்சாரியர் படத்தில் வருவதுபோல சுமனும் ஜி.வி.பியும் அவர்கள் கண்ணில் படாமல் மறைந்துபோகிறார்கள். அவர்கள் கிடைக்கும்போது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். ஆனால், தோட்டா சுடுவேனா என்கிறது. மாறாக, தீவிரவாதிகள் ஒருவர் பின் ஒருவராக இறக்கிறார்கள். கொஞ்சமும் யதார்த்தமும் புத்திசாலித்தனமும் இல்லாத இந்தக் காட்சிகள் படம் பார்ப்பவர்களை அயர்ச்சியில் தள்ளிவிடுகிறது.
இரண்டாம் பாகம் முழுவதுமே காட்சிகள் வேறு எங்குமே நகராமல், அந்த அரை வெளிச்ச பங்களாவிலேயே நடப்பது அலுப்பூட்டிவிடுகிறது. போலீஸ் அதிகாரியைப் பழித் தீர்க்க தீவிரவாதிகள் சொல்லும் காரணமும் நம்பும்படியாக இல்லை. துப்பாக்கிச் சத்தம் பங்களாவைத் தாண்டி வெளியே கேட்காதா என்ற கேள்வி படம் முடியும்வரை நம் மனதை துளைத்துக்கொண்டேயிருக்கிறது. ஒரு நாளில் நடக்கும் கதையை அவ்வப்போது நேரத்தை மாற்றி மாற்றி காட்சிப்படுத்தியிருப்பது திரைக்கதைக்கு வேகத்தடை. கடனை திருப்பி கொடுக்க ஒரு நாள் கெடு விதிக்கும் கடன்காரன், இரவு 12 மணிக்கெல்லாம் போன் செய்வது லாஜிக் ஓட்டை.
படத்தின் நாயகன் ஜி.வி.பி. இந்தக் கதைக்குப் பொருந்தியிருக்கிறார். கதையின்படி படம் முழுவதும் பதற்றமாகவும் பரபரப்பாகவும் இருக்கிறார். ஹீரோயிஸம் காட்ட முடியாத அந்தக் கதாபாத்திரத்தை அறிந்து நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் சம்யுக்தா ஹெக்டே என்ற நாயகி இருக்கிறார் என்று சொல்லும் அளவுக்கு இரண்டு காட்சிகளில் வந்துபோகிறார். ஜி.வி.பி.யின் நண்பனாக வரும் யோகி பாபுவின் பாத்திர வார்ப்பில் காமெடியும் இல்லை; அவர் ஸ்கோர் செய்ய காட்சி அமைப்புகளும் இல்லை.
தீவிரவாதியாக வரும் ராஜ் அர்ஜுனின் உடல்மொழி அந்தக் கதாபாத்திரத்துக்கு பொருந்தவேயில்லை. முன்னாள் போலீஸ் அதிகாரியாக வரும் சுமன், தாய் மாமனாக வரும் முனீஸ்காந்த் ஆகியோர் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் ஒரே ஆறுதல் புரூனே என்ற கதாபாத்திரத்தில் வரும் நாய்தான். பிற கதாபாத்திரங்களைவிட நாய் நன்றாக நடித்திருக்கிறது.
படத்துக்கு பலம் ஜி.வி.பி.யின் பின்னணி இசை. ஆனால், பாடல்கள் இல்லாத இந்தப் படத்தில் பின்னணி இசை ஹைடெசிபிளில் காது சவ்வை பதம் பார்த்துவிடுகிறது. இருட்டு பங்களாவைச் சுற்றிச் சுற்றி படம் பிடித்திருக்கும் நீரவ் ஷாவின் கேமராவைப் பற்றி என்ன சொல்வது? கனகச்சிதமாகக் காட்டாத அந்தோணியின் படத் தொகுப்பை பற்றி எதுவும் சொல்வதற்கில்லை.
திருடப் போகும் வீட்டுக்கே ‘வாட்ச்மேன்’ ஆக மாறும் இந்தக் காவலாளியிடம் ஈர்ப்பு இல்லை.
மதிப்பெண் 2 / 5
ஒரு நாள் இரவில் ஒரு வீட்டில் நடக்கும் சம்பவங்களை நகர்த்தி செல்வது என்பது எளிதான விஷயம் கிடையாது. ஆனால், இயக்குநர் விஜய் அதற்காக மெனக்கெட்டிருக்கிறார். ஒரு திடீர் திருடனுக்கு நேரும் எதிர்பாராத அதிர்ச்சியை சுவாரசியம் குறையாமல் காட்ட இயக்குநர் முயற்சி செய்திருக்கிறார். திருடப் போகும் இடத்தில் நாயிடம் மாட்டிக்கொள்ளும்போது அடுத்து என்ன ஆகுமோ என்ற பதற்றம் நாயகனை போல பார்வையாளர்களுக்கும் தொற்றிக்கொள்கிறது. ஆனால், பங்களாவுக்குள் தீவிரவாதிகள் நடத்தும் துப்பாக்கிச் சண்டை வீடியோ கேம்ஸ் போல மாறி காட்சியின் மீதான எதிர்பார்ப்பை குறைத்துவிடுகிறது.
ஒரு குறிப்பிட்ட பங்களாவுக்குள் திருட செல்ல ஜி.வி.பி. எடுக்கும் முடிவுக்கான காரணத்தை இயக்குநர் சரியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆனால், இந்த சிசிடிவி யுகத்தில் சர்வ சாதாரணமாகத் திருடச் செல்லுவது சாத்தியமா என்பதைக் கவனிக்க இயக்குநர் மறந்துவிட்டார்.
பெரிய துப்பாக்கிகளுடன் வீட்டைச் சுற்றி சுமனை தேடுகிறார்கள் தீவிரவாதிகள். ஆனால், விட்டலாச்சாரியர் படத்தில் வருவதுபோல சுமனும் ஜி.வி.பியும் அவர்கள் கண்ணில் படாமல் மறைந்துபோகிறார்கள். அவர்கள் கிடைக்கும்போது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். ஆனால், தோட்டா சுடுவேனா என்கிறது. மாறாக, தீவிரவாதிகள் ஒருவர் பின் ஒருவராக இறக்கிறார்கள். கொஞ்சமும் யதார்த்தமும் புத்திசாலித்தனமும் இல்லாத இந்தக் காட்சிகள் படம் பார்ப்பவர்களை அயர்ச்சியில் தள்ளிவிடுகிறது.
இரண்டாம் பாகம் முழுவதுமே காட்சிகள் வேறு எங்குமே நகராமல், அந்த அரை வெளிச்ச பங்களாவிலேயே நடப்பது அலுப்பூட்டிவிடுகிறது. போலீஸ் அதிகாரியைப் பழித் தீர்க்க தீவிரவாதிகள் சொல்லும் காரணமும் நம்பும்படியாக இல்லை. துப்பாக்கிச் சத்தம் பங்களாவைத் தாண்டி வெளியே கேட்காதா என்ற கேள்வி படம் முடியும்வரை நம் மனதை துளைத்துக்கொண்டேயிருக்கிறது. ஒரு நாளில் நடக்கும் கதையை அவ்வப்போது நேரத்தை மாற்றி மாற்றி காட்சிப்படுத்தியிருப்பது திரைக்கதைக்கு வேகத்தடை. கடனை திருப்பி கொடுக்க ஒரு நாள் கெடு விதிக்கும் கடன்காரன், இரவு 12 மணிக்கெல்லாம் போன் செய்வது லாஜிக் ஓட்டை.
படத்தின் நாயகன் ஜி.வி.பி. இந்தக் கதைக்குப் பொருந்தியிருக்கிறார். கதையின்படி படம் முழுவதும் பதற்றமாகவும் பரபரப்பாகவும் இருக்கிறார். ஹீரோயிஸம் காட்ட முடியாத அந்தக் கதாபாத்திரத்தை அறிந்து நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் சம்யுக்தா ஹெக்டே என்ற நாயகி இருக்கிறார் என்று சொல்லும் அளவுக்கு இரண்டு காட்சிகளில் வந்துபோகிறார். ஜி.வி.பி.யின் நண்பனாக வரும் யோகி பாபுவின் பாத்திர வார்ப்பில் காமெடியும் இல்லை; அவர் ஸ்கோர் செய்ய காட்சி அமைப்புகளும் இல்லை.
தீவிரவாதியாக வரும் ராஜ் அர்ஜுனின் உடல்மொழி அந்தக் கதாபாத்திரத்துக்கு பொருந்தவேயில்லை. முன்னாள் போலீஸ் அதிகாரியாக வரும் சுமன், தாய் மாமனாக வரும் முனீஸ்காந்த் ஆகியோர் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் ஒரே ஆறுதல் புரூனே என்ற கதாபாத்திரத்தில் வரும் நாய்தான். பிற கதாபாத்திரங்களைவிட நாய் நன்றாக நடித்திருக்கிறது.
படத்துக்கு பலம் ஜி.வி.பி.யின் பின்னணி இசை. ஆனால், பாடல்கள் இல்லாத இந்தப் படத்தில் பின்னணி இசை ஹைடெசிபிளில் காது சவ்வை பதம் பார்த்துவிடுகிறது. இருட்டு பங்களாவைச் சுற்றிச் சுற்றி படம் பிடித்திருக்கும் நீரவ் ஷாவின் கேமராவைப் பற்றி என்ன சொல்வது? கனகச்சிதமாகக் காட்டாத அந்தோணியின் படத் தொகுப்பை பற்றி எதுவும் சொல்வதற்கில்லை.
திருடப் போகும் வீட்டுக்கே ‘வாட்ச்மேன்’ ஆக மாறும் இந்தக் காவலாளியிடம் ஈர்ப்பு இல்லை.
மதிப்பெண் 2 / 5


No comments:
Post a Comment