சினிமாவில் முரட்டு அடியாளாக அறிமுகமாகும் எல்லோருக்குமே நிலையான இடம் கிடைத்துவிடுவதில்லை. வெகுசிலரே ரசிகர்களின் மனத்திலும் சினிமாவிலும் இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். அவர்களில், நடிகர் அழகுவும் ஒருவர். அடியாளாகவும் வில்லனாகவும் திரை வாழ்க்கையைத் தொடங்கிய அழகு, இன்று குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் மிளிர்ந்துவருகிறார். அண்மையில் வெளியாகி வரவேற்பு பெற்ற ‘தொரட்டி’யில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் ஆத்மார்த்தமாக வாழ்ந்துகாட்டியிருந்தார் அழகு.
புதுக்கோட்டை திருமயம் அருகே உள்ள கொளத்துப்பட்டிதான் அழகுவின் சொந்த ஊர். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்ததால், தேவக்கோட்டையில் இருந்த தாத்தா வீட்டில்தான் வளர்ந்தார். பள்ளிப் படிப்பை முடித்ததும் 1969-ம் ஆண்டிலேயே சென்னைக்கு ரயிலேறிவிட்டார். சென்னை வட பழனியில் வேலை பார்த்த அழகுக்கு, கராத்தே கற்றுக்கொள்ள விருப்பம். களரி, கராத்தே மாஸ்டராக இருந்த கோபாலன் குருக்களிடம் சேர்ந்து தற்காப்பு கலைகளைக் கற்றுக்கொண்டார். அந்த வகையில் கோபாலன் குருக்கள்தான் என்னுடைய குரு என்கிறார் அழகு.
சினிமாவில் அழகு வாய்ப்பு பெற்றது தற்செயல்தான். அப்போது சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் தற்காப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார் அழகு. விளைவு, இரு நாட்கள் கழித்து சினிமா சண்டை இயக்குநரான மாதவன் மாஸ்டர் ஆட்கள் அழகுவின் வீட்டைத் தேடி வந்திருக்கிறார்கள். ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று சினிமா வாய்ப்பு கிடைத்ததை நம்ப முடியாத அழகு, தயக்கத்துடன் கோபாலன் குருக்களிடம் அனுமதி கேட்டிருக்கிறார். ‘வாய்ப்பை விடாதே’ என்று குரு காட்டிய வழியில் பயணிக்க முடிவு செய்தார் அழகு.
அப்படி அழகு வாய்ப்பு பெற்ற படம்தான் 1975-ல் வெளியான ‘துணிவே துணை’. ஜெய்சங்கரின் ஹிட்பட வரிசையில் ஒன்றான இப்படத்தில் அவருடன் ஷோலோ சண்டைக் காட்சியில் அறிமுகமானார் அழகு. அதனையடுத்து சிவாஜி கணேசனுக்கு ‘டூப்’பாக நடித்ததைப் பெருமையாகச் சொல்கிறார் அழகு. “அந்தக் காலகட்டத்தில் ஸ்டண்ட் யூனியனில் உறுப்பினராக இருந்தால்தான் நடிக்க முடியும். முதல் படத்தில் நடிக்கவே எனக்கு சிறப்பு சலுகை வழங்கினார்கள். 1978-ல்தான் முறைபடி சங்கத்தில் சேர்ந்தேன். அதன்பிறகு ‘நான் பிறந்த மண்’ படத்தில் சிவாஜி கணேசனுக்கு ‘டூப்’ போட அழைத்தார்கள். அவ்வளவு பெரிய நடிகருக்கு ‘டூப்’ போட்டது வாழ்க்கையில் மறக்கவே முடியாது” என்கிறார் அழகு.
இந்தப் படத்துக்கு பிறகு ரஜினி, கமல், விஜயகாந்த், அமிதாப், பிரேம்நசீர், என்.டி.ஆர். சிரஞ்சீவி என தொடர்ச்சியாக சினிமாவில் சண்டைக் கலைஞராக பலருடன் சண்டைப் போட்டிருக்கிறார் அழகு. சுமார் 13 ஆண்டுகள் சண்டைக் கலைஞராக மட்டுமே திரையில் வந்துகொண்டிருந்த அழகுக்கு, 1988-ல் வெளியான ‘செந்தூரப்பூவே’ படம்தான் அவருடைய திரை வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது.
“சினிமாவில் யாரிடமாவது வாய்ப்பு கேட்க வேண்டும் என்றாலே
எனக்குக் கூச்சமாக இருக்கும். ரொம்ப யோசிப்பேன். 1986-ல் ஆபாவாணன் இயக்கத்தில் ‘ஊமை விழிகள்’ படத்தில் நடித்திருந்தேன். சினிமாவில் இளைஞர்கள் வந்த காலம் அது. அப்போதுதான் இயக்குநர் ஆபாவாணனிடம் எனக்கேற்ற கதாபாத்திரம் ஏதாவது இருந்தால் கொடுங்கள் என்று வாய்ப்பு கேட்டேன். ஆறு மாதங்கள் கழித்து ஒரு நாள் இரவு 11 மணிக்கு ஆபவாணனின் மேனேஜர் வீட்டுக்கு வந்தார். கையோடு ‘செந்தூரப்பூவே’ சூட்டிங்கிற்கு அழைத்து சென்றார். பரமேஸ்வரன் என்ற கதாபாத்திரத்தில் விஜயலலிதாவோடு சேர்ந்து வில்லத்தனம் செய்து நடித்தேன். அந்தப் படம் எனக்கு மிகப் பெரிய பிரேக் கொடுத்தது. அதற்கு முன்புவரை அடிவாங்குற ஆள் என்று என்னைச் சொன்னவர்கள்கூட ‘செந்தூரப்பூவே’ படத்தில் நடித்தவர் என்று சொல்வதைக் கேட்ட தருணத்தை இப்போதும் மறக்க முடியாது. என் சினிமா டிராக்கை மாற்றியவர் ஆபாவாணன்தான்” என்று உருகுகிறார் அழகு.
‘செந்தூரப்பூவே’ படத்துக்கு பிறகு சண்டைக் கலைஞராக நடிப்பதை நிறுத்திக்கொண்ட அழகு, நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார். “சண்டைக் காட்சிகளில் பலமுறை அடிபட்டு அறுவை சிகிச்சை நடந்ததாலும், ‘செந்தூரப்பூவே’யில் டிராக் மாறிய பிறகு மீண்டும் ‘யெஸ் பாஸ்’ என்று சொல்லும் கதாபாத்திரங்களில் நடிக்கவும் ஆர்வம் குறைந்தது” என்கிறார் அழகு. தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடியா என 6 மொழிப் படங்களில் அழகு நடித்திருக்கிறார். ‘தியாகம்’, ’ராஜா சின்ன ரோஜா’, ’கிழக்கு வாசல்’ ‘குடும்பம்’,‘ஆடாம ஜெயிச்சவங்க’, ‘பொண்ணுக்கேத்த புருஷன்’, ‘ஐ’, ‘மாரி’ என 400-க்கும் மெற்பட்ட படங்களில் நடித்திருக்கும் அழகு, சண்டைக் கலைஞர்கள் பற்றிய பார்வையையும் பகிர்ந்துகொள்கிறார்.
“பொதுவாக சண்டைக் கலைஞர்கள் என்றாலே, அவர்களுக்கும் நடிப்புக்கும் சம்பந்தம் கிடையாது என்றே நினைக்கிறார்கள். ஆனால், சண்டைக் கலைஞருக்கும் நடிப்பு முக்கியம். சண்டைக் காட்சியில் அடிக்கும்போது கோபத்தை ரியாக்ஷனாக காட்ட வேண்டும். அடி வாங்கும்போது வலியை வெளிப்படுத்த வேண்டும். சண்டைக்குள்ளும் நடிப்பு இருக்கு. வசனம் எதுவும் இல்லையென்றாலும் முக பாவனையில் சண்டைக் கலைஞர்கள் நடித்துதான் ஆக வேண்டும். இன்று நான் நடிக்கிறேன் என்றால், அதற்கு அடிப்படைக் காரணமே சண்டைக் காட்சிகள்தான்” என்கிறார் அழகு.
அண்மையில் வெளியான ‘தொரட்டி’ படம் அழகுவை மிகவும் கவனிக்க வைத்தது. கீதாரிகளின் வாழ்க்கையை கண்முன்னே கொண்டுவந்திருந்தவர், பாசக்கார அப்பாவாகவும் ஜொலித்திருந்தார். “’தொரட்டி’ படம் எனக்கு பெரிய திருப்புமுனை. அந்தப் படத்தில் நடிக்கணும்னு இயக்குநர் மாரிமுத்துவும் தயாரிப்பாளரும் நடிகருமான ஷமன் கேட்டபோது ஆச்சரியமா இருந்துச்சு. நான் சிறுவனாக இருந்தபோது கீதாரிகளைப் பார்த்திருக்கிறேன். 50 ஆண்டுகள் கழித்து நான் பார்த்து பழகிய அவர்களுடைய கதாபாத்திரத்தில் நடிக்க நேர்ந்தது மறக்க முடியாத அனுபவம். அந்தப் படத்தில் மேக்கப் கிடையாது. காலில் செருப்புக்கூட கிடையாது. படத்தில் ரிகர்ஸல் செய்துதான் எடுத்தார்கள். நானும் இரு நாட்கள் ரிகர்ஸலில் கலந்துகொண்டேன். நிறைய அனுபவம் கொடுத்த படம் இது” என்கிறார் அழகு.
70 வயதாகிவிட்ட அழகு, தற்போதும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். சினிமாவில் கெட்டவனாக நடித்திருந்தாலும் அவருக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது. சினிமாவில் புகழ் வெளிச்சத்துக்காக காத்திருக்கும் நூற்றுக்கணக்கான சண்டைக் கலைஞர்களுக்கு அழகு ஓர் உதாரணம்!
பிடித்த வில்லன்?
ரகுவரன். கதாநாயகனாக அவரிடம் அடிவாங்கியிருக்கிறேன். வில்லனாக அவருக்காகச் சண்டை போட்டிருக்கிறேன்.
சாதித்தது?
1975-லிருந்து சினிமாவில் இருப்பதே சாதனைதான்.
விருப்பம்?
நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடிக்க ஆசை.
பாராட்டு?
‘தொரட்டி’ படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் இமயம் பாராட்டியது.
அடுத்தப் படம்?
தனுஷின் ‘பட்டாசு’.
இந்து தமிழ், 30/08/2019
புதுக்கோட்டை திருமயம் அருகே உள்ள கொளத்துப்பட்டிதான் அழகுவின் சொந்த ஊர். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்ததால், தேவக்கோட்டையில் இருந்த தாத்தா வீட்டில்தான் வளர்ந்தார். பள்ளிப் படிப்பை முடித்ததும் 1969-ம் ஆண்டிலேயே சென்னைக்கு ரயிலேறிவிட்டார். சென்னை வட பழனியில் வேலை பார்த்த அழகுக்கு, கராத்தே கற்றுக்கொள்ள விருப்பம். களரி, கராத்தே மாஸ்டராக இருந்த கோபாலன் குருக்களிடம் சேர்ந்து தற்காப்பு கலைகளைக் கற்றுக்கொண்டார். அந்த வகையில் கோபாலன் குருக்கள்தான் என்னுடைய குரு என்கிறார் அழகு.
சினிமாவில் அழகு வாய்ப்பு பெற்றது தற்செயல்தான். அப்போது சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் தற்காப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார் அழகு. விளைவு, இரு நாட்கள் கழித்து சினிமா சண்டை இயக்குநரான மாதவன் மாஸ்டர் ஆட்கள் அழகுவின் வீட்டைத் தேடி வந்திருக்கிறார்கள். ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று சினிமா வாய்ப்பு கிடைத்ததை நம்ப முடியாத அழகு, தயக்கத்துடன் கோபாலன் குருக்களிடம் அனுமதி கேட்டிருக்கிறார். ‘வாய்ப்பை விடாதே’ என்று குரு காட்டிய வழியில் பயணிக்க முடிவு செய்தார் அழகு.
அப்படி அழகு வாய்ப்பு பெற்ற படம்தான் 1975-ல் வெளியான ‘துணிவே துணை’. ஜெய்சங்கரின் ஹிட்பட வரிசையில் ஒன்றான இப்படத்தில் அவருடன் ஷோலோ சண்டைக் காட்சியில் அறிமுகமானார் அழகு. அதனையடுத்து சிவாஜி கணேசனுக்கு ‘டூப்’பாக நடித்ததைப் பெருமையாகச் சொல்கிறார் அழகு. “அந்தக் காலகட்டத்தில் ஸ்டண்ட் யூனியனில் உறுப்பினராக இருந்தால்தான் நடிக்க முடியும். முதல் படத்தில் நடிக்கவே எனக்கு சிறப்பு சலுகை வழங்கினார்கள். 1978-ல்தான் முறைபடி சங்கத்தில் சேர்ந்தேன். அதன்பிறகு ‘நான் பிறந்த மண்’ படத்தில் சிவாஜி கணேசனுக்கு ‘டூப்’ போட அழைத்தார்கள். அவ்வளவு பெரிய நடிகருக்கு ‘டூப்’ போட்டது வாழ்க்கையில் மறக்கவே முடியாது” என்கிறார் அழகு.
இந்தப் படத்துக்கு பிறகு ரஜினி, கமல், விஜயகாந்த், அமிதாப், பிரேம்நசீர், என்.டி.ஆர். சிரஞ்சீவி என தொடர்ச்சியாக சினிமாவில் சண்டைக் கலைஞராக பலருடன் சண்டைப் போட்டிருக்கிறார் அழகு. சுமார் 13 ஆண்டுகள் சண்டைக் கலைஞராக மட்டுமே திரையில் வந்துகொண்டிருந்த அழகுக்கு, 1988-ல் வெளியான ‘செந்தூரப்பூவே’ படம்தான் அவருடைய திரை வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது.
“சினிமாவில் யாரிடமாவது வாய்ப்பு கேட்க வேண்டும் என்றாலே
எனக்குக் கூச்சமாக இருக்கும். ரொம்ப யோசிப்பேன். 1986-ல் ஆபாவாணன் இயக்கத்தில் ‘ஊமை விழிகள்’ படத்தில் நடித்திருந்தேன். சினிமாவில் இளைஞர்கள் வந்த காலம் அது. அப்போதுதான் இயக்குநர் ஆபாவாணனிடம் எனக்கேற்ற கதாபாத்திரம் ஏதாவது இருந்தால் கொடுங்கள் என்று வாய்ப்பு கேட்டேன். ஆறு மாதங்கள் கழித்து ஒரு நாள் இரவு 11 மணிக்கு ஆபவாணனின் மேனேஜர் வீட்டுக்கு வந்தார். கையோடு ‘செந்தூரப்பூவே’ சூட்டிங்கிற்கு அழைத்து சென்றார். பரமேஸ்வரன் என்ற கதாபாத்திரத்தில் விஜயலலிதாவோடு சேர்ந்து வில்லத்தனம் செய்து நடித்தேன். அந்தப் படம் எனக்கு மிகப் பெரிய பிரேக் கொடுத்தது. அதற்கு முன்புவரை அடிவாங்குற ஆள் என்று என்னைச் சொன்னவர்கள்கூட ‘செந்தூரப்பூவே’ படத்தில் நடித்தவர் என்று சொல்வதைக் கேட்ட தருணத்தை இப்போதும் மறக்க முடியாது. என் சினிமா டிராக்கை மாற்றியவர் ஆபாவாணன்தான்” என்று உருகுகிறார் அழகு.
‘செந்தூரப்பூவே’ படத்துக்கு பிறகு சண்டைக் கலைஞராக நடிப்பதை நிறுத்திக்கொண்ட அழகு, நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார். “சண்டைக் காட்சிகளில் பலமுறை அடிபட்டு அறுவை சிகிச்சை நடந்ததாலும், ‘செந்தூரப்பூவே’யில் டிராக் மாறிய பிறகு மீண்டும் ‘யெஸ் பாஸ்’ என்று சொல்லும் கதாபாத்திரங்களில் நடிக்கவும் ஆர்வம் குறைந்தது” என்கிறார் அழகு. தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடியா என 6 மொழிப் படங்களில் அழகு நடித்திருக்கிறார். ‘தியாகம்’, ’ராஜா சின்ன ரோஜா’, ’கிழக்கு வாசல்’ ‘குடும்பம்’,‘ஆடாம ஜெயிச்சவங்க’, ‘பொண்ணுக்கேத்த புருஷன்’, ‘ஐ’, ‘மாரி’ என 400-க்கும் மெற்பட்ட படங்களில் நடித்திருக்கும் அழகு, சண்டைக் கலைஞர்கள் பற்றிய பார்வையையும் பகிர்ந்துகொள்கிறார்.
“பொதுவாக சண்டைக் கலைஞர்கள் என்றாலே, அவர்களுக்கும் நடிப்புக்கும் சம்பந்தம் கிடையாது என்றே நினைக்கிறார்கள். ஆனால், சண்டைக் கலைஞருக்கும் நடிப்பு முக்கியம். சண்டைக் காட்சியில் அடிக்கும்போது கோபத்தை ரியாக்ஷனாக காட்ட வேண்டும். அடி வாங்கும்போது வலியை வெளிப்படுத்த வேண்டும். சண்டைக்குள்ளும் நடிப்பு இருக்கு. வசனம் எதுவும் இல்லையென்றாலும் முக பாவனையில் சண்டைக் கலைஞர்கள் நடித்துதான் ஆக வேண்டும். இன்று நான் நடிக்கிறேன் என்றால், அதற்கு அடிப்படைக் காரணமே சண்டைக் காட்சிகள்தான்” என்கிறார் அழகு.
அண்மையில் வெளியான ‘தொரட்டி’ படம் அழகுவை மிகவும் கவனிக்க வைத்தது. கீதாரிகளின் வாழ்க்கையை கண்முன்னே கொண்டுவந்திருந்தவர், பாசக்கார அப்பாவாகவும் ஜொலித்திருந்தார். “’தொரட்டி’ படம் எனக்கு பெரிய திருப்புமுனை. அந்தப் படத்தில் நடிக்கணும்னு இயக்குநர் மாரிமுத்துவும் தயாரிப்பாளரும் நடிகருமான ஷமன் கேட்டபோது ஆச்சரியமா இருந்துச்சு. நான் சிறுவனாக இருந்தபோது கீதாரிகளைப் பார்த்திருக்கிறேன். 50 ஆண்டுகள் கழித்து நான் பார்த்து பழகிய அவர்களுடைய கதாபாத்திரத்தில் நடிக்க நேர்ந்தது மறக்க முடியாத அனுபவம். அந்தப் படத்தில் மேக்கப் கிடையாது. காலில் செருப்புக்கூட கிடையாது. படத்தில் ரிகர்ஸல் செய்துதான் எடுத்தார்கள். நானும் இரு நாட்கள் ரிகர்ஸலில் கலந்துகொண்டேன். நிறைய அனுபவம் கொடுத்த படம் இது” என்கிறார் அழகு.
70 வயதாகிவிட்ட அழகு, தற்போதும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். சினிமாவில் கெட்டவனாக நடித்திருந்தாலும் அவருக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது. சினிமாவில் புகழ் வெளிச்சத்துக்காக காத்திருக்கும் நூற்றுக்கணக்கான சண்டைக் கலைஞர்களுக்கு அழகு ஓர் உதாரணம்!
பிடித்த வில்லன்?
ரகுவரன். கதாநாயகனாக அவரிடம் அடிவாங்கியிருக்கிறேன். வில்லனாக அவருக்காகச் சண்டை போட்டிருக்கிறேன்.
சாதித்தது?
1975-லிருந்து சினிமாவில் இருப்பதே சாதனைதான்.
விருப்பம்?
நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடிக்க ஆசை.
பாராட்டு?
‘தொரட்டி’ படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் இமயம் பாராட்டியது.
அடுத்தப் படம்?
தனுஷின் ‘பட்டாசு’.
இந்து தமிழ், 30/08/2019
No comments:
Post a Comment