15/12/2017

தமிழுக்குக் கிடைத்த 'மூன்று முடிச்சிகள்'

மூன்று முடிச்சு படப் போஸ்டர்
1970.... ஸ்டூடியோக்கள் யுகம் மறைந்து மனம் மயக்கும் மண்வாசனை தொடங்கிய காலம். எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற இரு பெரும் கலைஞர்களின் ஆதிக்கம் குறைய தொடங்கிய நேரம். புதிய புதிய படைப்பாளிகள் கதை உள்ளடக்கத்திலும், காட்சி அமைப்பிலும் யதார்த்தத்தைப் புகுத்திய தருணம். பல எதிர்பார்ப்புகளோடு புதிய கலைஞர்கள் தமிழ்ச் சினிமாவில் காலடி எடுத்து வைத்த வேளை. ஆனால், அந்த இரண்டு கலைஞர்களின் எழுச்சி தமிழ்ச் சினிமாவின் தடத்தை மாற்றியது. அறிமுகமாகிச் சில ஆண்டுகளிலேயே தமிழ் சினிமாவின் பிதாமகன்களான அந்த இரு கலைஞர்கள் யார்? கமல், ரஜினி!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சூப்பர் ஸ்டார்களாக இருந்தவர்கள் எம்.ஜி.ஆர்.-சிவாஜி. 1970-களிம் முற்பகுதியில் எம்.ஜி.ஆர். தீவிர அரசியலுக்கு சென்றுவிட சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். அவரோடு சமகாலத்தில் நடித்து புகழ்பெற்ற இன்னொரு மாபெரும் கலைஞரான சிவாஜி நடித்துக்கொண்டிருந்தாலும் வயதுக்கேற்ற வேடங்களில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் உச்ச நட்சத்திரங்கள் இடங்கள் காலியாகின. அந்தக் காலியிடத்தை வேறு யாராவது பிடிப்பார்கள் என்று அப்போது யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.




எம்.ஜி.ஆர்.-சிவாஜி  நாயகர்களாகக் கொடிக்கட்டி பறந்த காலத்தில் அறிமுகமாகி 70-களிலும் கோலோச்சிய முத்துராமன், ஏ.வி.எம்.ராஜன், ஜெய்சங்கர், சிவகுமார், ரவிச்சந்திரன், ஸ்ரீகாந் போன்றவர்கள் அந்த ஓட்டத்தில் இருக்கவும் இல்லை. 1960-களில்  எம்.ஜி.ஆரும் சிவாஜியும் தனித்தனிப் பார்முலாவை உருவாக்கி, அதில் பயணித்து மாபெரும் வெற்றி பெற்றார்கள். 1970-களின் முற்பகுதியில் முன்னேறிக் கொண்டிருந்த நாயகர்கள் அதே பழைய பாணி பார்முலாவையே பின்பற்றினார்கள்.  இந்தப் படங்களில் துள்ளல்மயமான,  வித்தியாசமான, சாகசங்கள் நிறைந்த காட்சிகளோ, புதுமைகளோ  இருந்ததில்லை.

எம்.ஜி.ஆரும். சிவாஜியும் செய்த காட்டிய அதே  நடிப்பு உத்தியை மற்றவர்களும் பின்பற்றியபோது அது ரசிகர்களுக்குச் சலிப்பை உண்டாக்கின என்றும் சொல்லலாம். அதன் காரணமாக அவர்களால் ரசிகர்களைப் பெரியளவில் ஈர்க்க முடியாமல் போனது. 1970-களின் மத்தியில்
அறிமுகமான கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் ரசிகர்களை ஈர்த்ததற்கும்  இதுதான் காரணம். கால ஓட்டத்துக்கு
ஏற்ப இளமை துள்ளல், சாகசங்கள், காதல் ரசம் கொட்ட வைத்த காட்சிகள் என ரசிகர்களை ஈர்க்கும் மந்திர உத்திகளை ரஜினி-கமல் பயன்படுத்தினார்கள். அது அவர்களுக்குத் தமிழ் சினிமாவில் புதிய அடையாளத்தை உருவாக்கியது.

‘அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே...’ என மழலை சொல் மாறாமல் பாட்டு பாடி நடித்த சிறுவன் கமல், 1970-களின் முற்பகுதியில் வாலிபனாகப் பாலசந்தரால் ‘அரங்கேற்றம்’ ஆனார். தொடர்ந்து  இயக்குநர் பாலசந்தரின் சொல்லத்தான் நினைக்கிறேன், அவள் ஒரு தொடர்கதை, நான் அவனில்லை எனப் பல படங்களில் தலையைக் காட்டிக் கொண்டிருந்த கமலுக்கு 1975-ம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டு. அந்த ஆண்டில்தான் கமல் நாயகனாகப் பரிணமித்த அபூர்வ ராகங்கள் வெளியானது. கமலுக்குப் பெரும் அங்கீகாரம் கொடுத்த படம்.   படத்தின் கதை சர்ச்சைக்குள்ளான ஒரு கருவைக்
கொண்டிருந்தாலும் வித்தியாசமான கதைக்காக  மாபெரும் வெற்றி பெற்றது. 
இந்தப் படத்தில் விடலைப் பருவத்து நாயகனாக  நடித்தது முதலே கமல் என்ற அரிய கலைஞன் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்துவிட்டார். இதே படத்தின் முதல் காட்சியில் கறுப்பான தோற்றம், பரட்டை தலையுடன் தோன்றிய ரஜினி, தமிழ் ரசிகர்களின் இதய
ங்களைக் கட்டிப்போட்டுவிட்டார். அடுத்த சில ஆண்டுகளின் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களாகத் தாம் இருப்போம் என 1975-ல் கமலும் ரஜினியும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள்.

குறிப்பாக ரஜினி என்றாலே ஸ்டைல், ஸ்டைல் என்றாலே ரஜினி என்ற ஒரு காலம் அப்போதே தொடங்கிவிட்டது. அவர் நடித்த படங்களில் ஏதாவது ஒரு வகை ஸ்டைல் ரசிகர்களு
க்காகத் திணிக்கப்பட்ட காலகட்டம் அது. கமல் என்றாலே காதல் மன்னன் என்றானது. அவரது படத்தில் உருகிக் உருகி காதல் ரசம் பாலாறு தேனாருமாக ஓடும். அப்படியே  நடிப்புக்காக வித்தியாசமான தோற்றங்களில் மாறுவது, நடிப்புக்காக மெனக்கெடுவதும் கமலுக்கான ஒரு அடையாளமாகிபோனது.

ஆரம்பக் காலப் படங்களில் ஸ்டைல் முத்திரை ரஜினி மீது விழுவதற்கு  மூன்று முடிச்சி படமும் ஒரு காரணம். சாதுவான கமல், கனிவான ஸ்ரீதேவி, கோரமான ரஜினி என மூன்று பேருமே  நடிப்பில் ஸ்கோர் செய்த படம். சாதாரண முக்கோணக் காதல் கதை போல் தெரிந்தாலும், ரஜினியின் கோரமுகம் வெளிப்படும் போதும் கதை வேகமெடுக்கும். ஸ்ரீதேவியை அடைய ரஜினி முயற்சிக்க
, ஸ்ரீதேவியோ ரஜினியின் அப்பாவையே திருமணம் செய்து கொண்டு அவருக்குச் சித்தியாக வந்து  ரஜினியை வெறுப்பேற்றும்போது இருவருக்கும் மாறி மாறி ஸ்கோர் விழுந்து கொண்டே இருந்தது. ரஜினியின் வித்தியாசமான மேனரிசமும், அவரது வேகமும், வில்லத்தனமிக்க பேச்சும் அந்தக் காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ரஜினிக்குத் தமிழில் புதிய தொடக்கத்தைக் கொடுத்த படம் இது.

அதேபோல 1976-ல் ரஜினி-கமல்-ஸ்ரீதேவி நடித்துத் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த இன்னொரு படம்  ‘16 வயதினிலே’. படம் வெளியாகி 40 ஆண்டுகளைத் தொட்டும்கூடச் சப்பாணி-பரட்டை-மயில் கதாபாத்திரங்கள் இன்னும் பேசப்படுகிறது. ராஜபாட் உடையிலும், ஒயிட் காலர் டிரஸ்ஸிலும்  நாயகர்களைப் பார்த்துச் சலித்துபோன ரசிகர்கள், கோவணத்தில்  ‘சப்பாணி கமலை’ப் பா
மூன்று பேருக்கும் பெயர் பெற்று தந்த படம்
ர்த்து அதிசயித்துதான் போனார்கள்.  ‘இதெப்படி இருக்கு...’ என்று 40 ஆண்டுகளுக்கு முன்பே பஞ் டயலாக் பேசிய 'பரட்டை ரஜினி'க்குத் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத கேரக்டராக அது அமைந்தது.
மூன்று முடிச்சி, 16 வயதினிலே என இரண்டுப் படங்களை இங்கே குறிப்பிட ஒரு காரணம் உண்டு. ஏனென்றால் இந்த இரு படங்களும் முறையே 1975, 1976-ம் ஆண்டுகளில் வெளியான படங்கள். ரஜினியும் கமலும் அறிமுகமான ஓரிரு ஆண்டுகளிலே உச்சிக்குக் கொண்டு போன படங்கள்.  கமலும் ரஜினியும் அறிமுகமான சில ஆண்டுகளிலே தமிழ் படத்தை எப்படி ஆக்கிரமித்துவிட்டார்கள் என்பதை ஒரு புள்ளிவிவரத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தாலே புரிந்து விடும்.

 1975-ம் ஆண்டு முதல் 1979-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முக்கிய நாயகர்களாக வலம் வந்த ரவிச்சந்திரன் 8 படங்களிலும், ஜெய்சங்கர் 11 படங்களிலும், சிவக்குமார் 17 படங்களிலும் மட்டுமே நடித்திருக்கிறார்கள். தனி ஆவர்த்தணமாக சிவாஜி கணேசன் 38 படங்களில் நடித்துள்ளார். கமலை எடுத்துக் கொண்டால் இந்தக் காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் சேர்த்து 85 படங்களில் நடித்திருக்கிறார். இதில் தமிழ் படங்களின் எண்ணிக்கை மட்டும் 44.  ரஜினியோ தமிழ், இந்தி, தெலுங்கு என 55 படங்களில் நடித்துள்ளார். இவற்றில் தமிழில் மட்டும்   34 படங்கள்.
1950-60-களில் சூப்பர் ஸ்டார்களாக இருந்த எம்.ஜி.ஆரும்., சிவாஜியும் ஒரே படத்தில்தான் ஒன்றாகச் சேர்ந்து நடித்தார்கள்.

1975 முதல் 1979-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில்  கமல் - ரஜினி அபூர்வ ராகம், மூன்று முடிச்சி, அவர்கள், 16 வயதினிலே, தப்புத்தாளங்கள், இளமை ஊஞ்சலாடுகிறது, தாயில்லாமல் நானில்லை, நினைத்தாலே இனிக்கும், அலாவுதீனும் அற்புத விளக்கும் என 9 தமிழ் படங்களிலும், 2 தெலுங்கு படங்களிலும், ஒரு இந்தி படத்திலும் ஒன்றாக நடித்திருக்கிறார்கள்.  இவற்றில் பெரும்பாலான படங்களில் கமல் நாயகனாகவே நடித்திருந்தார். ரஜினி இரண்டாவது கதாநாயகன் அல்லது முக்கியமான வேடம்தான். தொடக்கக் காலத்தில் எந்த ஈகோவும் இல்லாமல் இருவரும் மாறிப் மாறி படங்களில் நடித்து ரசிகர்களைச் சம்பாதித்தார்கள். 1970-களில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதில் ரஜினியும் கமலும் ஒன்றாகச் சேர்ந்து படங்களில் நடித்ததும் ஒரு காரணம்.

தொடக்கக் காலத்தில் இவர்கள் இருவரும் ரசிகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் விதமான கேரக்டர்களையே தேர்ந்தெடுத்து நடித்தார்கள். கமல் அந்தரங்கம், மன்மத லீலை, உணர்ச்சிகள், மோகம் முப்பது வருஷம் எனக் காதல் படங்கள் கொஞ்சம் அதிகம். வில்லன்தனம் மிக்க பாத்திரங்களில் நடித்துகொண்டிருந்த போது பைரவி படத்தில் நாயகனாக அறிமுகமானார் ரஜினி. இந்தக் காலகட்டத்தில் புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை எனக் குணச்சித்திரப் படங்களும் ரஜினியின் நடிப்புத் திறமைக்குச் சான்றாக அமைந்தன. ஸ்டை
ல் மன்னன் என்று பேசப்பட்ட காலத்தில் ரஜினிக்குள் இருந்த குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்திய படங்கள் இவை.

கமலும் ரஜினியும் கொஞ்சம் வளரவளர, நாயகர்களாக நிலை பெற்ற பிறகு அவர்களுக்கான கதையமைப்பும் காட்சியமைப்புகளும் மாறின. கமலைப் பொறுத்தவரை ஒரு சர்க்கஸ் கலைஞரைப் போலப் பல ஆச்சரியமான, திறமையான, பரிதாபப்படவைக்கும் வேடங்களைச் செய்து மக்களை ரசிக்க வைத்தார். ஆனால் ரஜினியோ மேஜி நிபுணரைப்போ
ல ஸ்டைலாக நடித்து மக்களை வசியம் செய்தார்.   ரஜினி படங்களில் தம்பி, தங்கச்சி, அம்மா என்று குடும்பச் செண்டிமெண்ட் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். கமல் படங்களில் பெரும்பாலும் காதலிக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் இருக்கும். கமல் படங்களில் அதிகமாகக் காதலில் ஜெயிக்கச் சவால் விடுவது, காதலியைக் காப்பாற்ற வில்லன்களுடன் போராடுவது போலக் காட்சிகள் இருக்கும்.

பல படங்களில் சேர்ந்து நடித்த கமலும் ரஜினியும் 1980-ம் ஆண்டுக்குப் பிறகு சேர்ந்து நடிப்பதில்லை என்று முடிவெடுத்துத் தனித்தனிப் பாதையை வகுத்துக் கொண்டார்கள். ரஜினி-கமல் என்று பேச்செடுத்தாலே 1980-ஐ பற்றிதான் பேசுவார்கள். ஆனால், 1970-களில் மத்தியிலேயே அவர்களின் யுகம் தொடங்கிவிட்டது; 1970-களிலே உச்ச நட்சத்திர அந்
தஸ்தைப் பெற்றுவிட்டார்கள். அன்று தொடங்கிய அந்த யுகம் 35 ஆண்டுகளைக் கடந்தும் நீடிப்பதும் ஆச்சரியமும் அதிசயமும் கலந்த விஷயம்தான் என்பது நிதர்சனமான உண்மை.

கனவுக்கன்னி ஸ்ரீதேவி


குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிக் குமரியாகத் திரையுலகில் வலம்வந்து மலைக்க வைத்தவர் ஸ்ரீதேவி. 1970-களில் கதா நாயர்களைப் போலவே நாயகிகளின் இடத்திலும் ஒரு வெற்றிடம். 1960-களில் ரசிகர்களின் கனவு கன்னிகளாக இருந்தவர்கள் அம்மா, அக்கா வேடத்துக்கு மாறியபோது 1970-களில் இளமை பஞ்சம் ஏற்பட்டது. 1970-களில் மஞ்சுளா, லதா, ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா, சுமித்ரா போன்ற நடிகைகள் புதிதாக அறிமுகமாகிக் கவனம் ஈர்த்துகொண்டிருந்தார்கள். குறிப்பாக மஞ்சுளாவும் லதாவும் பெரும்பாலும் சீனியர் நடிகர்களுடன் ரொமான்ஸ் செய்துகொண்டிருந்ததால், அவர்கள் சீனியர்களுக்கான ஜோடிகளாகவே பார்க்கப்பட்டார்கள். அப்போது   டீன்ஏஜ் பருவத்தில் சினிமாவில் காலடி வைத்த ஸ்ரீதேவியின் வருகை ரசிகர்கள் மனதில் இளமை அலை அடிக்க வைத்தது.

 ரஜினிக்கு மூன்று முடிச்சி படம் எப்படியோ அதுபோல ஸ்ரீதேவிக்கும் அந்தப் படம் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. ஈகோ பார்க்காமல் மூன்று முடிச்சி படத்தில் முதியவரைத் திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்தது முத்தாய்ப்பாக அமைந்தது. பதினாரு வயதினிலே படத்தில் ஸ்ரீதேவி நடித்தபோது அவருக்கு 14 வயதுதான். டீன்ஏஜ் பருவத்தில் வரும் இனக்கவர்ச்சி காதலை அழகாக உள்வாங்கி நடித்து அந்தக் கால இளைஞர்களை ‘மயில்..மயில்..’ என்று சொல்ல வைத்துத் தூக்கத்தைக் கெடுத்தவர் ‘மயில் ஸ்ரீதேவி’. இந்தப் படத்தில் மயில் ஏற்படுத்திய தாக்கம் தமிழ் சினிமா உள்ளவரை  நிச்சயம் நிலைத்திருக்கும்.
காயத்ரி படத்தில்...
ஸ்ரீதேவியின் அழகும், அவரது இயல்பான நடிப்பும் அவருக்கு ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. குறுகிய காலத்திலேயே கனவுக்கன்னியாக வலம் வரத் தொடங்கினார் ஸ்ரீதேவி.  வணக்கத்துக்குரிய காதலியே’ படத்தில் இரட்டை வேடம். ரஜினி,  விஜயகுமார் என இருவருடனும் டூயட் பாடிய இரண்டு ஸ்ரீதேவிகளுமே கருப்பு வெள்ளையிலும் கலர்ஃபுல்லாக தெரிந்தார்கள்.  பாரதிராஜா, கமல் கூட்டணியில் வந்த ‘சிவப்பு ரோஜாக்கள்’ படத்தின் கதாநாயகி சாரதாவை எளிதில் மறந்துவிட முடியுமா?  இந்த மின்மினிக்குக் கண்ணிலொரு பாட்டில் அந்தக் காலத்திலேயே பிகினி  உடையில் வந்த ரசிகர்களைக் கிறங்கடித்தார் ஸ்ரீதேவி.

ஸ்ரீதேவி-கமல் கூட்டணியில் வந்த ‘மீண்டும் கோகிலா’ ஒரு இதமான நகைச்சுவை இழையோடிய அழகு படம்.  ‘குரு’ ‘ தாயில்லாமல் நானில்லை’, ‘வறுமையின் நிறம் சிகப்பு’ என்று கமலுடன் அவர் ஜோடி சேர்ந்த ஒவ்வொரு படமும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து. கமல்-ஸ்ரீதேவி ஜோடி கனவு ஜோடியாகத் தமிழ் சினிமாவில் வலம் வந்தது 1970-களின் பிற்பகுதியிலேயே தொடங்கிவிட்டது.  கமலுடன் ஸ்ரீதேவி நடித்ததைப் போலவே ரஜினியுடனும் 1970-களில் பல படங்களில் நடித்திருக்கிறார் ஸ்ரீதேவி. ப்ரியா, தர்மயுத்தம், தனிக்காட்டு ராஜா எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.

1970-களின் பிற்பகுதியும், 1980-களின் முற்பகுதியும் என 10 ஆண்டுகள் தமிழ் சினிமா என்றால் கமல், ரஜினி, ஸ்ரீதேவி என்று சொல்லுமளவுக்கு கொடிகட்டிப் பறந்தார்கள். அந்தக் காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல்வேறு படங்களையும் சேர்த்துக் கமல்-ஸ்ரீதேவி ஜோடி 21 படங்களிலும் நடித்துள்ளது. அதேபோல ரஜினி-ஸ்ரீதேவி ஜோடி 22 படங்களில் நடித்துள்ளது. இதில் கமல்-ஸ்ரீதேவி ஜோடி தமிழில் மட்டும் 15 படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்கள். ரஜினி-ஸ்ரீதேவி 12 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

இதில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி என மூன்று பேரும் இரண்டு படங்களில் சங்கமித்திருக்கிறார்கள். இவர்கள் மூன்று பேரையும் முதன்முதலில் ஒன்றாகச் சேர்த்தது ‘மூன்று முடிச்சி’ படம்தான்.
அழகையும் நடிப்பையும் ஒருங்கே கொண்ட நடிகைகளில் முக்கிய இடம் இவருக்குத்தான். ஸ்ரீதேவிக்குப் பிறகு அவரைப் போல ஒரு தமிழ் நடிகை தமிழ் சினிமாவுக்குக் கிடைக்கவேயில்லை. கமல், ரஜினி என இருவருடன் சேர்ந்து நடித்தளவுக்கு ஸ்ரீ தேவி ஏனோ ஏனைய நடிகர்களுடன் அவ்வளவாக நடிக்கவில்லை.

No comments:

Post a Comment