தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் எத்தனை செல்வாக்கோடு இருந்தாலும், திரையில் ஜொலிக்கும் நாயகர்கள்தாம் அந்தந்தப் படங்களின் ஒட்டுமொத்த அடையாளங்கள். நாயகர்களுக்குள் யார் முதன்மையானவர் என்ற போட்டிகள் எப்போதும் இருந்தாலும், ஓர் ஆண்டில் நாயகர்கள் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை, படங்களின் வெற்றி, தோல்வி போன்ற விஷயங்கள் நாயகர்களின் உச்சத்தையும், வளர்ந்து வரும் வேகத்தையும் வெளிச்சம் போட்டு காட்டிவிடும். ஆனால், ஒவ்வோர் ஆண்டும் தங்களின் நடிப்பாற்றலின் மூலம் சிறந்த கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்ற கதாநாயகர்கள் என்று பெயரெடுப்பவர்கள் ஒரு சிலரே. அந்த வகையில் இந்த ஆண்டு நடிப்பின் மூலம் வெற்றிக்கொடி கட்டியவர்கள் யார்?
அஜித்
கடந்த ஆண்டு ஒரு படமும் வரவில்லையே என்ற ரசிகர்களின் ஏக்கத்தை இந்த ஆண்டு இரட்டிப்பாகத் தீர்த்து வைத்தார் அஜித். ஆண்டு தொடக்கத்தில் ‘விஸ்வாசம்’, ஆண்டு மத்தியில் ‘நேர்க்கொண்டப் பார்வை’ என இரு வேறு பரிமாணங்களில் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். பொதுவெளியில் தலை காட்டாத அஜித்தை திரையில் பார்ப்பதே ரசிகர்களுக்கு கொண்டாட்டமான அனுபவம்தான். அதற்கேற்ப ‘விஸ்வாச’த்தில் ‘தூக்குதுரை’யாக படம் முழுக்க வேஷ்டி, முறுக்கு மீசை, மதுரை வட்டார மொழியில் அஜித் வெளுத்துவாங்கினார்.
பெண்களை அவமதிப்பதில்தான் ஆணின் வீரம் அடங்கியிருப்பதாகத் தமிழ் சினிமா தொடர்ந்து கதைகளைக் கட்டமைத்துவரும் சூழலில், முன்னணி நாயகரான அஜித் அதைத் தகர்த்தெறிந்த படம் ‘நேர்கொண்டப் பார்வை’. பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாக்கப்படும் பெண்களையே குற்றவாளிகளாக்க முயலும் பொதுப்புத்தியை அஜித் தோலுரித்துகாட்டியவிதம் எல்லோரையும் ஈர்த்தது. ‘நோ’ என்று சொன்னால் நோதான்’ என்று பெண்களின் பார்வையிலிருந்து ஓர் ஆணாக அஜித் பேசியது முக்கியமான தருணமாக அமைந்தது. தான் ஒரு முன்னணி கதாநாயகன் என்ற பிம்பத்தைத் தூக்கிப் பிடிக்காமல் ‘நேர்க்கொண்டப் பார்வை’யோடு நடித்த கதாபாத்திரம் அஜித்தைப் பெண்கள் மத்தியில் நிஜ கதாநாயகனாக உயர்த்தியது. ‘விஸ்வாசம்’, ‘நேர்க்கொண்டப் பார்வை’ என இரு படங்களும் அஜித்துக்கு வெற்றி படங்களாகவும் வசூலைக் குவித்த படமாகவும் இந்த ஆண்டு அமைந்தன.
விஜய்
ஆண்டுக்கு ஒரிரு படங்களில் தலையைக் காட்டும் கொள்கையைப் பின்பற்றும் விஜய், இந்த ஆண்டு நடித்து வெளியான ஒரே படம் ‘பிகில்’. முதன் முறையாக அப்பா - மகன் என அவதாரம் எடுத்த படமும்கூட. விஜய் அப்பா வேடத்துக்கு செட் ஆவாரா என எழுந்த கேள்விகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, மிக எளிமையான தோற்ற வேறுபாடு, குரல் மாறுபாடு என அப்பா - மகன் கதபாத்திரங்களை சிறப்பாகவே கடந்துசென்றார் விஜய்.
கால்பந்து வீரராகவும் பயிற்சியாளராகவும் வரும் காட்சிகளில் விஜயின் வழக்கமான துறுதுறுப்பும் இளமைத் துள்ளலும் ரசிகர்களைக் கவர்ந்தன. ஏற்கனவே வந்த படங்களின் சாயல் கொண்ட படம் என்ற விமர்சனத்தை ‘பிகில்’ பெற்றபோதும், படம் பாக்ஸ் ஆபிஸை நிரப்ப தவறவில்லை.
கார்த்தி
முன்னணி வரிசையில் உள்ள நாயகர்கள் ஓரிரு படங்களில் நடித்துவிட்டு பிரம்மாண்ட வெற்றிக்காகக் காத்திருக்கும் வேளையில் கார்த்தியின் கேரியர் கிராஃப் தொடர்ந்து பரமபத ஏணியில் ஏறுவதைப்போல ஏறிக்கொண்டிருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் ‘தேவ்’, ‘கைதி’, ‘தம்பி’ என மூன்று வெவ்வேறுவிதமான கதையம்சங்கள் உள்ள படங்களில் கார்த்தி நடித்திருந்தார். கொஞ்சம் சறுக்கல் அடைந்தாலும், பல மடங்கு உயரமாக அடுத்தடுத்த படங்களில் வெற்றியைப் பெறும் நடிகர்களில் கார்த்தியும் ஒருவர்.
‘தேவ்’ சறுக்கலை ஏற்படுத்த ‘கைதி’யில் இறங்கி அடித்தார் கார்த்தி. தீபாவளி திருநாளில் ‘பிகில்’ ஃபீவர் ரசிகர்களை ஆக்கிரமித்திருந்த வேளையில், ‘கைதி’யில் டில்லியாக கார்த்தி டேக் ஆஃப் ஆனார். படம் முழுவதுமே லுங்கியும் தாடியும் நெற்றியில் திருநீறுமாக அதகளம் செய்திருந்தார். ‘தேவ்’ படத்தின் கதாபாத்திரத்துக்கு நேர்மாறாக கார்த்தி நடிப்பில் கெத்து காட்டியிருந்தில் ‘கைதி’ கார்த்தியின் கேரியரில் இன்னொரு மைல்கல்லானது. ஆண்டு இறுதியில் வெளியான ‘தம்பி’ படம் கார்த்தியின் வழக்கமான படமாக அமைந்தாலும், தன்னுடைய டிரேட் மார்க் நடிப்பால் ரசிகர்களுக்குத் தீனிப்போட தவறவில்லை.
தனுஷ்
கடந்த ஆண்டு இரு படங்களில் நடித்ததுபோல இந்த ஆண்டும் தனுஷ் நடித்து இரு படங்களே வெளியாயின. ‘அசுரன்’. நீண்ட நாளாக கிடப்பில் கிடந்த ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ என இரு படங்களோடு திருப்தியானார் தனுஷ். ‘அசுரன்’ தனுஷின் சினிமா கேரியரில் தரமான படமாகப் பதிவான நிலையில் ‘தோட்டா’ சீறி பாயாமல் போனது. ஆனால், ‘அசுரன்’ கொடுத்த வெற்றி இன்னும் ஓராண்டுக்கு தாங்கும் என்று சொல்லுமளவுக்கு நடிப்பைக்
கொட்டி நடித்திருந்தார் தனுஷ்.
திருமணம் செய்யும் வயதில் ஒரு மகனுக்கு அப்பாவாக தனுஷ் ஏற்ற சிவசாமி வேடம் பொருந்தவில்லையோ என்ற கேள்வியை தனது நடிப்பால் ஈடுகட்டி நடித்திருந்தார். பிள்ளைகளுக்குப் பாசமான அப்பா, குடும்பத்தைக் காக்கப் போராடும் குடும்பத் தலைவன், ஃபிளாஷ்பேக்கில் அழகான காதலன், சாதிய துவேஷங்களை எதிர்க்கும் ஆக்ரோஷமான இளைஞன் என ஒவ்வொரு காட்சியிலும் தனுஷ் மிளிர்ந்தார். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தனுஷுக்கு ஒரு படம் வெற்றி, ஒரு படம் தோல்வி. அந்த வகையில் தனுஷுக்கு ஃபிப்டி மகிழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது ‘அசுரன்’.
விஜய் சேதுபதி
மசாலா படமா, கிராமத்துப் படமா, பெண்களை மையப்படுத்திய படமா, ஃபீரியட் படமா, நாயகன் பிம்பத்தைப் பார்க்காத படமா என எந்தப் படமாக இருந்தாலும் ஒரே சாய்ஸ் விஜய் சேதுபதி என்ற நிலையைத் தமிழ் திரையுலகம இந்த ஆண்டும் பார்த்தது. விஜய் சேதுபதி நடிப்பில் ‘பேட்ட’, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘சிந்துபாத்’, ‘சைரா’, ‘சங்கத்தமிழன்’ என ஐந்து படங்கள் வெளியாகின. ஐந்து படங்கள் வெளியாகியிருந்தாலும் ‘சூப்பர் டீலக்’ஸில் விஜய் சேதுபதி ஏற்ற திருநங்கை வேடம் பேச வைத்தது.
எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அதில் விஜய்சேதுபதி தனித்து தெரிவதைப் போல ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்திலும் தனித்து தெரிந்தார். நாயகன் என்ற இமேஜை தூர வைத்துவிட்டு, ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரம் மூலம் இயக்குநரின் நடிகராக விஜய் சேதுபதி மாறி நடித்திருந்தார். காவல் நிலையத்தில் விஜய் சேதுபதி ஏற்றிருந்த அந்தக் காட்சியை எந்த நாயகனாவது செய்வாரா என்று யோசிக்க வைத்திருந்தார். திருநங்கைகளின் துயரத்தை, மனப்போராட்டத்தை, பொதுவாழ்வில் எதிர் கொள்ளும் சிக்கல்களை இயல்பான உடல்மொழி, முகபாவம், வசன உச்சரிப்புத் தொனி ஆகியவை வழியே பிரமிப்பூட்டும் வகையில் வெளிப்படுத்தியிருந்தார் விஜய் சேதுபதி. ‘சூப்பர் டீலக்ஸ்’ என்ற ஒற்றைப் படம் விஜய் சேதுபதி என்ற கலைஞனை இந்த ஆண்டு தனித்து அடையாளப்படுத்தியது.
பார்த்திபன்
நடிப்புக் கலைஞரான ஆர். பார்த்திபன் பல படங்களில் பரிணமித்திருக்கிறார். இந்த ஆண்டு அவருடைய இயக்கத்தில் நடித்து வெளியான ‘ஒத்த செருப்பு’ என்ற படத்தின் தலைப்புக்கு ஏற்ப ஒற்றை ஆளாக புதியதொரு பாணியில் நடித்து தமிழ் திரையுலகத்துக்கு அதை அறிமுகம் செய்து வைத்தார் பார்த்திபன். படத்தில் அபூர்வமானதும் சவாலானதுமான அம்சமாக முதன்மைக் கதாபாத்திரங்களில் ஒன்றான பார்த்திபன் ஏற்ற மாசிலாமணி என்ற கதாபாத்திரம் மட்டுமே திரையில் தோன்றுவது என்ற யோசனையே பிரமிக்க வைத்தது.
ஒரே அறை, ஒரே நடிகர் என்று சலிப்படைய வைக்காமல் சுமார் இரண்டு மணி நேரம் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டதில் திரைக் கதையாசிரியருமாக நடிகருமாக இரட்டை சவாரியில் பார்த்திபன் அழுத்தமான வெற்றியைப் பதிவு செய்திருந்தார். வித்தியாசமான படங்கள் எனக் குரல் வழியே சொல்லிக்கொண்டிருக்காமல் அதை ஒலியும் ஒளியும் ஆக்கி ‘புதிய பாதை’ போட்டதில் ‘குடைக்குள் மழை’யாக பார்த்திபன் இந்த ஆண்டு ஜில்லென ரசிக்க வைத்தார்.
ஆர்யா
இந்த ஆண்டு ஆர்யா நடிப்பில் ‘மகாமுனி’ ‘காப்பான்’ என இரு படங்கள் வெளியாகியிருந்தது. ‘காப்பா’னில் துக்கடாவாக வந்துபோனவர் மகாமுனியில் தூள் கிளப்பியிருந்தார். இரட்டை வேடங்கள் என்பதே கதாநாயகர்களின் சாகசங்களுக்கான களமாக பயன்படுத்திவரும் தமிழ் சினிமாவில், இரட்டை வேடத்தை சராசரி மனிதர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி ஆர்யா ஏற்றிருந்தது ரசிர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுத்தது.
நடிக்க வாய்ப்புள்ள படங்கள் என்றால், ஆர்யா அவதாரம் வேறுமாதிரி இருக்கும் என்று இன்னொரு முறை அழுத்தமாகப் பதிவு செய்திருந்தார் ஆர்யா. ‘நான் கடவுள்’ அகோரிபோல ஆர்யாவுக்கு மகா, முனி கதாபாத்திரங்கள் வாழ்நாள் கதாபாத்திரங்கள். அந்தப் பாத்திர வார்ப்புக்கு கச்சிதமாகப் பொருந்தியதோடு மட்டுமல்லாமல், அதன் நுட்பங்களை உணர்ந்து, உடல்மொழி, வசன உச்சரிப்பிலும் நடிப்பை வெளிப்படுத்தியவிதத்தில் ஆர்யாவுக்கு ஆயிரம் வாலா பட்டாசு போடலாம்.
அருண் விஜய்
அருண் விஜய் நீண்ட நாள் கழித்து இந்த ஆண்டு அழுத்தமாக ‘தடம்’ பதித்தார். இரட்டையர் கதாபாத்திரத்தில் அவர் நடித்து வெளியான ‘தடம்’ படம் ஒத்த இரட்டையர்கள் (Identical twins) குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதை தோலுரித்துக் காட்டியது. இரு வேடங்களில் வெரைட்டி காட்டி நடித்து ரசிகர்களைக் கட்டிப்போட்டார் அருண் விஜய். இரட்டையர்
பாத்திரத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்திய அருண் விஜய், தோற்றத்திலும் உடல்மொழியிலும் ரொம்பவே மாற்றத்தைக் காட்டியிருக்கிறார். அருண் விஜயின் சினிமா கேரியரில் இப்படம் அவருக்கு தனித்த அடையாளத்தை ஏற்படுத்தியது.
திரைக்கு வெளியே.. மு. ராமசாமி
நாயகர்கள் வயதான வேடத்தில் நடிப்பது தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல. ஆனால், வயதான நாடகக் கலைஞரான மு.ராமசாமி முதன்மைக் கதாபாத்திரம் ஏற்று நடித்த படமாக வெளியானது ‘கே.டி. என்ற கருப்புத்துரை’ படம். உறவுகளால் உதறப்பட்ட முதியவரும் உறவுகள் யார் என்றே தெரியாத ஒரு சிறுவனும் நடத்தும் அன்பு சாம்ராஜ்ஜியம்தான் படத்தின் பயணம். கதைதான் படத்தின் நாயகன் என்பதால், நட்சத்திர அந்தஸ்து எல்லாம் இரண்டாம்பட்சமானது. நாடகங்கள் மூலம் நடிப்பு ஆளுமையாக உருவெடுத்திருக்கும் மு.ராமசாமி கருப்புத்துரை கதாபாத்திரத்தில் நம் வீட்டு தாத்தாவைக் கண்முன்னே கொண்டுவந்தார்.
ஊட்டி வளர்த்த பிள்ளைகளே தன்னைக் கொல்ல நினைக்கிறார்களே எனும் வேதனையும், குட்டி என்ற சிறுவன் மூலம் கிடைக்கும் அன்பில் நெகிழ்வதிலும் வஞ்சனையே இல்லாமல் நடித்திருந்தார். அதுவும் நல்லி எலும்பைக் கடித்தபடி பிரியாணி சாப்பிடும் காட்சியைப் பார்த்தவர்கள், படம் முடிந்ததும் நேராக பிரியாணிக் கடைக்கு போகும் அளவுக்கு தத்ரூபமாக நடித்து கலக்கியிருந்தார் மு.ராமசாமி. கடைசி காலத்தில் கைவிடப்பட்ட முதியவரின் மொத்த வலியையும் பார்வையாளர்களுக்கு அப்படியே கடத்தியதிலும் மு.ராமசாமி மிளிர்ந்தார். பல படங்களில் சிறு வேடங்களில் வந்துபோன மு.ராமசாமிக்கு இந்தப் படம் தனித்த அடையாளத்தை ஏற்படுத்திக்கொடுத்தது.
- இந்து தமிழ், 27-12-2019
அஜித்
கடந்த ஆண்டு ஒரு படமும் வரவில்லையே என்ற ரசிகர்களின் ஏக்கத்தை இந்த ஆண்டு இரட்டிப்பாகத் தீர்த்து வைத்தார் அஜித். ஆண்டு தொடக்கத்தில் ‘விஸ்வாசம்’, ஆண்டு மத்தியில் ‘நேர்க்கொண்டப் பார்வை’ என இரு வேறு பரிமாணங்களில் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். பொதுவெளியில் தலை காட்டாத அஜித்தை திரையில் பார்ப்பதே ரசிகர்களுக்கு கொண்டாட்டமான அனுபவம்தான். அதற்கேற்ப ‘விஸ்வாச’த்தில் ‘தூக்குதுரை’யாக படம் முழுக்க வேஷ்டி, முறுக்கு மீசை, மதுரை வட்டார மொழியில் அஜித் வெளுத்துவாங்கினார்.
பெண்களை அவமதிப்பதில்தான் ஆணின் வீரம் அடங்கியிருப்பதாகத் தமிழ் சினிமா தொடர்ந்து கதைகளைக் கட்டமைத்துவரும் சூழலில், முன்னணி நாயகரான அஜித் அதைத் தகர்த்தெறிந்த படம் ‘நேர்கொண்டப் பார்வை’. பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாக்கப்படும் பெண்களையே குற்றவாளிகளாக்க முயலும் பொதுப்புத்தியை அஜித் தோலுரித்துகாட்டியவிதம் எல்லோரையும் ஈர்த்தது. ‘நோ’ என்று சொன்னால் நோதான்’ என்று பெண்களின் பார்வையிலிருந்து ஓர் ஆணாக அஜித் பேசியது முக்கியமான தருணமாக அமைந்தது. தான் ஒரு முன்னணி கதாநாயகன் என்ற பிம்பத்தைத் தூக்கிப் பிடிக்காமல் ‘நேர்க்கொண்டப் பார்வை’யோடு நடித்த கதாபாத்திரம் அஜித்தைப் பெண்கள் மத்தியில் நிஜ கதாநாயகனாக உயர்த்தியது. ‘விஸ்வாசம்’, ‘நேர்க்கொண்டப் பார்வை’ என இரு படங்களும் அஜித்துக்கு வெற்றி படங்களாகவும் வசூலைக் குவித்த படமாகவும் இந்த ஆண்டு அமைந்தன.
விஜய்
ஆண்டுக்கு ஒரிரு படங்களில் தலையைக் காட்டும் கொள்கையைப் பின்பற்றும் விஜய், இந்த ஆண்டு நடித்து வெளியான ஒரே படம் ‘பிகில்’. முதன் முறையாக அப்பா - மகன் என அவதாரம் எடுத்த படமும்கூட. விஜய் அப்பா வேடத்துக்கு செட் ஆவாரா என எழுந்த கேள்விகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, மிக எளிமையான தோற்ற வேறுபாடு, குரல் மாறுபாடு என அப்பா - மகன் கதபாத்திரங்களை சிறப்பாகவே கடந்துசென்றார் விஜய்.
கால்பந்து வீரராகவும் பயிற்சியாளராகவும் வரும் காட்சிகளில் விஜயின் வழக்கமான துறுதுறுப்பும் இளமைத் துள்ளலும் ரசிகர்களைக் கவர்ந்தன. ஏற்கனவே வந்த படங்களின் சாயல் கொண்ட படம் என்ற விமர்சனத்தை ‘பிகில்’ பெற்றபோதும், படம் பாக்ஸ் ஆபிஸை நிரப்ப தவறவில்லை.
கார்த்தி
முன்னணி வரிசையில் உள்ள நாயகர்கள் ஓரிரு படங்களில் நடித்துவிட்டு பிரம்மாண்ட வெற்றிக்காகக் காத்திருக்கும் வேளையில் கார்த்தியின் கேரியர் கிராஃப் தொடர்ந்து பரமபத ஏணியில் ஏறுவதைப்போல ஏறிக்கொண்டிருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் ‘தேவ்’, ‘கைதி’, ‘தம்பி’ என மூன்று வெவ்வேறுவிதமான கதையம்சங்கள் உள்ள படங்களில் கார்த்தி நடித்திருந்தார். கொஞ்சம் சறுக்கல் அடைந்தாலும், பல மடங்கு உயரமாக அடுத்தடுத்த படங்களில் வெற்றியைப் பெறும் நடிகர்களில் கார்த்தியும் ஒருவர்.
‘தேவ்’ சறுக்கலை ஏற்படுத்த ‘கைதி’யில் இறங்கி அடித்தார் கார்த்தி. தீபாவளி திருநாளில் ‘பிகில்’ ஃபீவர் ரசிகர்களை ஆக்கிரமித்திருந்த வேளையில், ‘கைதி’யில் டில்லியாக கார்த்தி டேக் ஆஃப் ஆனார். படம் முழுவதுமே லுங்கியும் தாடியும் நெற்றியில் திருநீறுமாக அதகளம் செய்திருந்தார். ‘தேவ்’ படத்தின் கதாபாத்திரத்துக்கு நேர்மாறாக கார்த்தி நடிப்பில் கெத்து காட்டியிருந்தில் ‘கைதி’ கார்த்தியின் கேரியரில் இன்னொரு மைல்கல்லானது. ஆண்டு இறுதியில் வெளியான ‘தம்பி’ படம் கார்த்தியின் வழக்கமான படமாக அமைந்தாலும், தன்னுடைய டிரேட் மார்க் நடிப்பால் ரசிகர்களுக்குத் தீனிப்போட தவறவில்லை.
தனுஷ்
கடந்த ஆண்டு இரு படங்களில் நடித்ததுபோல இந்த ஆண்டும் தனுஷ் நடித்து இரு படங்களே வெளியாயின. ‘அசுரன்’. நீண்ட நாளாக கிடப்பில் கிடந்த ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ என இரு படங்களோடு திருப்தியானார் தனுஷ். ‘அசுரன்’ தனுஷின் சினிமா கேரியரில் தரமான படமாகப் பதிவான நிலையில் ‘தோட்டா’ சீறி பாயாமல் போனது. ஆனால், ‘அசுரன்’ கொடுத்த வெற்றி இன்னும் ஓராண்டுக்கு தாங்கும் என்று சொல்லுமளவுக்கு நடிப்பைக்
கொட்டி நடித்திருந்தார் தனுஷ்.
திருமணம் செய்யும் வயதில் ஒரு மகனுக்கு அப்பாவாக தனுஷ் ஏற்ற சிவசாமி வேடம் பொருந்தவில்லையோ என்ற கேள்வியை தனது நடிப்பால் ஈடுகட்டி நடித்திருந்தார். பிள்ளைகளுக்குப் பாசமான அப்பா, குடும்பத்தைக் காக்கப் போராடும் குடும்பத் தலைவன், ஃபிளாஷ்பேக்கில் அழகான காதலன், சாதிய துவேஷங்களை எதிர்க்கும் ஆக்ரோஷமான இளைஞன் என ஒவ்வொரு காட்சியிலும் தனுஷ் மிளிர்ந்தார். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தனுஷுக்கு ஒரு படம் வெற்றி, ஒரு படம் தோல்வி. அந்த வகையில் தனுஷுக்கு ஃபிப்டி மகிழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது ‘அசுரன்’.
விஜய் சேதுபதி
மசாலா படமா, கிராமத்துப் படமா, பெண்களை மையப்படுத்திய படமா, ஃபீரியட் படமா, நாயகன் பிம்பத்தைப் பார்க்காத படமா என எந்தப் படமாக இருந்தாலும் ஒரே சாய்ஸ் விஜய் சேதுபதி என்ற நிலையைத் தமிழ் திரையுலகம இந்த ஆண்டும் பார்த்தது. விஜய் சேதுபதி நடிப்பில் ‘பேட்ட’, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘சிந்துபாத்’, ‘சைரா’, ‘சங்கத்தமிழன்’ என ஐந்து படங்கள் வெளியாகின. ஐந்து படங்கள் வெளியாகியிருந்தாலும் ‘சூப்பர் டீலக்’ஸில் விஜய் சேதுபதி ஏற்ற திருநங்கை வேடம் பேச வைத்தது.
எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அதில் விஜய்சேதுபதி தனித்து தெரிவதைப் போல ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்திலும் தனித்து தெரிந்தார். நாயகன் என்ற இமேஜை தூர வைத்துவிட்டு, ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரம் மூலம் இயக்குநரின் நடிகராக விஜய் சேதுபதி மாறி நடித்திருந்தார். காவல் நிலையத்தில் விஜய் சேதுபதி ஏற்றிருந்த அந்தக் காட்சியை எந்த நாயகனாவது செய்வாரா என்று யோசிக்க வைத்திருந்தார். திருநங்கைகளின் துயரத்தை, மனப்போராட்டத்தை, பொதுவாழ்வில் எதிர் கொள்ளும் சிக்கல்களை இயல்பான உடல்மொழி, முகபாவம், வசன உச்சரிப்புத் தொனி ஆகியவை வழியே பிரமிப்பூட்டும் வகையில் வெளிப்படுத்தியிருந்தார் விஜய் சேதுபதி. ‘சூப்பர் டீலக்ஸ்’ என்ற ஒற்றைப் படம் விஜய் சேதுபதி என்ற கலைஞனை இந்த ஆண்டு தனித்து அடையாளப்படுத்தியது.
பார்த்திபன்
நடிப்புக் கலைஞரான ஆர். பார்த்திபன் பல படங்களில் பரிணமித்திருக்கிறார். இந்த ஆண்டு அவருடைய இயக்கத்தில் நடித்து வெளியான ‘ஒத்த செருப்பு’ என்ற படத்தின் தலைப்புக்கு ஏற்ப ஒற்றை ஆளாக புதியதொரு பாணியில் நடித்து தமிழ் திரையுலகத்துக்கு அதை அறிமுகம் செய்து வைத்தார் பார்த்திபன். படத்தில் அபூர்வமானதும் சவாலானதுமான அம்சமாக முதன்மைக் கதாபாத்திரங்களில் ஒன்றான பார்த்திபன் ஏற்ற மாசிலாமணி என்ற கதாபாத்திரம் மட்டுமே திரையில் தோன்றுவது என்ற யோசனையே பிரமிக்க வைத்தது.
ஒரே அறை, ஒரே நடிகர் என்று சலிப்படைய வைக்காமல் சுமார் இரண்டு மணி நேரம் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டதில் திரைக் கதையாசிரியருமாக நடிகருமாக இரட்டை சவாரியில் பார்த்திபன் அழுத்தமான வெற்றியைப் பதிவு செய்திருந்தார். வித்தியாசமான படங்கள் எனக் குரல் வழியே சொல்லிக்கொண்டிருக்காமல் அதை ஒலியும் ஒளியும் ஆக்கி ‘புதிய பாதை’ போட்டதில் ‘குடைக்குள் மழை’யாக பார்த்திபன் இந்த ஆண்டு ஜில்லென ரசிக்க வைத்தார்.
ஆர்யா
இந்த ஆண்டு ஆர்யா நடிப்பில் ‘மகாமுனி’ ‘காப்பான்’ என இரு படங்கள் வெளியாகியிருந்தது. ‘காப்பா’னில் துக்கடாவாக வந்துபோனவர் மகாமுனியில் தூள் கிளப்பியிருந்தார். இரட்டை வேடங்கள் என்பதே கதாநாயகர்களின் சாகசங்களுக்கான களமாக பயன்படுத்திவரும் தமிழ் சினிமாவில், இரட்டை வேடத்தை சராசரி மனிதர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி ஆர்யா ஏற்றிருந்தது ரசிர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுத்தது.
நடிக்க வாய்ப்புள்ள படங்கள் என்றால், ஆர்யா அவதாரம் வேறுமாதிரி இருக்கும் என்று இன்னொரு முறை அழுத்தமாகப் பதிவு செய்திருந்தார் ஆர்யா. ‘நான் கடவுள்’ அகோரிபோல ஆர்யாவுக்கு மகா, முனி கதாபாத்திரங்கள் வாழ்நாள் கதாபாத்திரங்கள். அந்தப் பாத்திர வார்ப்புக்கு கச்சிதமாகப் பொருந்தியதோடு மட்டுமல்லாமல், அதன் நுட்பங்களை உணர்ந்து, உடல்மொழி, வசன உச்சரிப்பிலும் நடிப்பை வெளிப்படுத்தியவிதத்தில் ஆர்யாவுக்கு ஆயிரம் வாலா பட்டாசு போடலாம்.
அருண் விஜய்
அருண் விஜய் நீண்ட நாள் கழித்து இந்த ஆண்டு அழுத்தமாக ‘தடம்’ பதித்தார். இரட்டையர் கதாபாத்திரத்தில் அவர் நடித்து வெளியான ‘தடம்’ படம் ஒத்த இரட்டையர்கள் (Identical twins) குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதை தோலுரித்துக் காட்டியது. இரு வேடங்களில் வெரைட்டி காட்டி நடித்து ரசிகர்களைக் கட்டிப்போட்டார் அருண் விஜய். இரட்டையர்
பாத்திரத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்திய அருண் விஜய், தோற்றத்திலும் உடல்மொழியிலும் ரொம்பவே மாற்றத்தைக் காட்டியிருக்கிறார். அருண் விஜயின் சினிமா கேரியரில் இப்படம் அவருக்கு தனித்த அடையாளத்தை ஏற்படுத்தியது.
திரைக்கு வெளியே.. மு. ராமசாமி
நாயகர்கள் வயதான வேடத்தில் நடிப்பது தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல. ஆனால், வயதான நாடகக் கலைஞரான மு.ராமசாமி முதன்மைக் கதாபாத்திரம் ஏற்று நடித்த படமாக வெளியானது ‘கே.டி. என்ற கருப்புத்துரை’ படம். உறவுகளால் உதறப்பட்ட முதியவரும் உறவுகள் யார் என்றே தெரியாத ஒரு சிறுவனும் நடத்தும் அன்பு சாம்ராஜ்ஜியம்தான் படத்தின் பயணம். கதைதான் படத்தின் நாயகன் என்பதால், நட்சத்திர அந்தஸ்து எல்லாம் இரண்டாம்பட்சமானது. நாடகங்கள் மூலம் நடிப்பு ஆளுமையாக உருவெடுத்திருக்கும் மு.ராமசாமி கருப்புத்துரை கதாபாத்திரத்தில் நம் வீட்டு தாத்தாவைக் கண்முன்னே கொண்டுவந்தார்.
ஊட்டி வளர்த்த பிள்ளைகளே தன்னைக் கொல்ல நினைக்கிறார்களே எனும் வேதனையும், குட்டி என்ற சிறுவன் மூலம் கிடைக்கும் அன்பில் நெகிழ்வதிலும் வஞ்சனையே இல்லாமல் நடித்திருந்தார். அதுவும் நல்லி எலும்பைக் கடித்தபடி பிரியாணி சாப்பிடும் காட்சியைப் பார்த்தவர்கள், படம் முடிந்ததும் நேராக பிரியாணிக் கடைக்கு போகும் அளவுக்கு தத்ரூபமாக நடித்து கலக்கியிருந்தார் மு.ராமசாமி. கடைசி காலத்தில் கைவிடப்பட்ட முதியவரின் மொத்த வலியையும் பார்வையாளர்களுக்கு அப்படியே கடத்தியதிலும் மு.ராமசாமி மிளிர்ந்தார். பல படங்களில் சிறு வேடங்களில் வந்துபோன மு.ராமசாமிக்கு இந்தப் படம் தனித்த அடையாளத்தை ஏற்படுத்திக்கொடுத்தது.
- இந்து தமிழ், 27-12-2019