தமிழ் சினிமா தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கக் காரணம், புதிய புதிய திறமை மிக்க கலைஞர்கள் உருவாவதுதான். அந்த வகையில் அண்மைக் காலங்களில் தமிழ் சினிமாவில் நுழைந்து தவிர்க்க முடியாதக் கலைஞர்களாக உருவெடுத்திருப்பது ஒரு சிலரே. வாரிசு கலைஞர்களாக இருந்தாலும் சரி, சினிமா பின் புலம் இல்லாத கலைஞர்களாக இருந்தாலும் சரி, திரை வானில் நட்சத்திரமாக ஜொலிக்க மிகவும் மெனக்கெட வேண்டும். அப்படி மெனக்கெட்டு நடித்து, ரசிகர்கள் மத்தியில் இந்தாண்டு ஜொலித்த சிலர்:
சிவ கார்த்திகேயன்
பெரிய திரையில் ஜொலித்து ரிட்டயர்மென்ட் ஆன பிறகு சின்னத்திரை பற்றி நினைக்கும் தமிழகச் சினிமா நட்சத்திரங்களின் எண்ணத்தைச் சிதறடித்தவர் சிவ கார்த்திகேயன். மிமிக்ரி கலைஞராகத் தோன்றியத் தொலைக்காட்சியிலேயே நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி, அங்குத் தனக்கெனத் தனிப் பாணியை உருவாக்கி, இன்று பெரிய திரையில் வெற்றிக்கொடி கட்டியவர் இந்த நாயகன்.
கடந்த ஆண்டு ‘மெரினா’ படத்தில் அறிமுகமானபோது பத்தோடு பதினொன்று என நினைத்தவர்கள்கூட இன்று அவரது கேரியர் கிராப் மேலே ஏறி வருவதைப் பார்த்து வாயடைத்து நிற்கிறார்கள். ஓர் ஆண்டில் ஒரு வெற்றிப் படம் கொடுக்கவே பெரிய நட்சத்திரங்கள் மல்லுக்கட்டும் இந்தக் காலகட்டத்தில் ‘எதிர்நீச்சல்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என இரு வெற்றிப்படங்களைக் கொடுத்து அமைதியாகப் பயணிக்கிறார் இந்த நாயகன்.
காமெடி என்ற பலத்தோடு சினிமாவுக்குள் நுழைந்த சிவ கார்த்திகேயன் அந்த இமேஜில் இருந்து வெளி வர மெனக்கெடுவதும் இப்போது தெரிகிறது. அது அவருக்குச் சாதகமாகப் பாதகமா என்பது போகப் போகத்தான் தெரிய வரும். ‘மான் கராத்தே’, ‘அந்த ஒன்னுதான் இது’ என அடுத்த ஆண்டிலும் நிறையப் படங்கள் கைவசம் வைத்திருக்கும் சிவ கார்த்திகேயன் இந்த ஆண்டில் பிராகசித்த கலைஞனாக மின்னுகிறார்.
விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் இப்போது பிசியான நடிகர் யார் தெரியுமா? அது விஜய்
சேதுபதிதான். ‘சுந்தரபாண்டியன்’ படத்தைத் தொடர்ந்து ‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சூது கவ்வும்’ எனத் தொடர்ச்சியாக ஹாட்ரிக் ஹிட் அடித்த விஜய் சேதுபதியின் கைவசம் தற்போது 5-க்கும் மேற்பட்ட படங்கள். இன்னும் பல படங்களில் ஒப்பந்தமாகிக் கொண்டு இருக்கிறார்.
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்று சொல்வார்கள். இதற்கு நல்ல உதாரணம் விஜய் சேதுபதி. 2010-ம் ஆண்டில் வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு முன்பு வரை 5 ஆண்டுகளுக்கும் மேலாக, இவர் பல படங்களில் சிறு வேடங்களில் நடித்தவர்.
அந்த அனுபவத்தையே களமாக அமைத்துக்கொண்டு வேகமாக முன்னேறி வருகிறார்.
தற்போது பாப்புலராக உள்ள இளம் இயக்குநர்கள் இயக்கும் படங்களில் நடிக்கவே முன்னணி ஹீரோக்கள் ஆர்வம் காட்டு நிலையில், விஜய் சேதுபதி மட்டும் விதிவிலக்காகச் செயல்படுகிறார். சீனியர் இயக்குநர்களின் இணை, துணை மற்றும் குறும்படங்களின் இயக்குநர்கள்தான் இவரது சாய்ஸ்.
முன்னணி ஹீரோக்களுடன் இரட்டையர்களில் ஒருவராகவும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவும் தயாராக இருப்பதாகக் கூறும் விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாதக் கலைஞனாக உருவெடுத்து வருகிறார்.
விக்ரம் பிரபு
நடிகர் திலகத்தின் பேரன், இளைய திலகத்தின் மகன் என்ற பெருமையோடு சினிமாவுக்குள் நுழைந்த விக்ரம் பிரபு, தாத்தா, அப்பாவின் பெயரைக் காப்பாற்றத் தவறவில்லை. தாத்தா போலவே பேரன் விக்ரம் பிரபுவுக்குக் ‘கும்கி’ வெற்றிப் படமாக அமைந்தது இவருக்கு அதிர்ஷ்டம் என்றே சொல்லலாம். அழுத்தமான கதை, விறுவிறுப்பான திரைக்கதை, சிறந்த இயக்கம், வருடும் இசை எனச் சம விகிதத்தில் கலந்த ‘கும்கி’ப் படத்தில் யானைப் பாகன் பொம்மனாக மிளிர்ந்தார் விக்ரம் பிரபு.
முதல் படம் வெற்றியாக அமைந்து அவருக்கு யானைப் பலம் கொடுத்தது என்றால், ஓராண்டு கழித்து இப்போது வேற மாதிரியாக வந்திருக்கிறார் விக்ரம் பிரபு. சமகாலத்தில் நீதிமன்றத்தில் நிகழ்ந்த கலவரத்தை ஒன் லைனாக கொண்ட கதையில் கோபம் கொப்பளித்திருக்கிறார் விக்ரம் பிரபு. வர்த்தக ரீதியாக வெற்றி பட்டியலில் இந்தப் படத்துக்கும் நிச்சயம் இடம் இருக்கும்.
இரு படங்களைக் கடந்து அடுத்த கட்டமாக ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற ரீமேக் படத்தில் இறங்கியிருக்கிறார் விக்ரம் பிரபு.
விஜயகாந்துக்குப் பெயர் பெற்றுக்கொடுத்த இந்தப் படம் விக்ரம் பிரபுவுக்கும் பெயர் கொடுக்கலாம். நடிப்பையும், சினிமாவையும் கடலளவு நேசிக்கும் குடும்பத்தில் இருந்து வந்த இந்த மீன் குஞ்சுக்கு, நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன?
லட்சுமி மேனன்
கோடம்பாக்கத்தில் இப்போது அதிகம் உச்சரிக்கப்படும் பெயர் லட்சுமி மேனன்.
பாவாடை, தாவணியைத் தமிழ் நாட்டு இளம் பெண்களே மறந்து விட்ட இந்தக் காலத்தில் பாவாடை, தாவணியில் தொடர்ந்து 3 படங்களில் நடித்து இளைஞர்களின் மனதில் சம்மணம் போட்டு அமர்ந்திருக்கிறார் லட்சுமி.
அறிமுகப்படம் வெற்றி பெற்றாலே தலைகால் புரியாத திரையுலகில் வரிசையாகச் ‘ சுந்தரப்பாண்டியன்’, ‘கும்கி’, ‘குட்டிப்புலி’, ‘பாண்டிய நாடு’ என நான்கு வெற்றி படங்களில் நடித்தும் அலட்டிக்கொள்ளாத நடிகை. தொடர்ந்து ‘மஞ்சப்பை’, ‘ஜிகர்தண்டா’, ‘சிப்பி’, ‘வசந்தகுமாரன்’ என 4 படங்கள் இவரது கைவசம் உள்ளன.
சினிமாவில் நிலை நிறுத்திக்கொள்ளக் கிளாமர் எனும் ஆயுதத்தை ஏந்தாமல் இருப்பது பெண்கள் மத்தியிலும் லட்சுமிக்கு ரசிகைகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. நடிப்புக்கு இடையேயும் பள்ளிப் படிப்பையும் விடாமல் ஆச்சரியம் தரும் லட்சுமி மேனன் நம்பிக்கை நட்சத்திரமாகக் காட்சியளிக்கிறார்.
நஸ்ரியா
நடிகர் சிவ கார்த்திகேயன் போலச் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் நஸ்ரியா. அழகும் திறமையும் உள்ள நடிகை. மலையாளப் படங்களில் இவர் நடித்திருந்தாலும், தமிழ் படத்தில் நடித்த ‘நேரம்’ இவருக்குப் நல்ல நேரமாகவே அமைந்தது என்று சொல்லலாம். இவர் தேர்ந்தெடுக்கும் படங்களுக்காகவே இவரை நிச்சயம் பாராட்டலாம்.
அறிமுகமான நேரம் திரைப்படம் நடிப்புக்கு முக்கியத்துவமுள்ள நாயகியாக நஸ்ரியாவை அடையாளம் காட்டியது. அடுத்த படமான ‘ராஜா ராணி’ படத்தில் நயன்தாராவுக்கு இணையாக இவரது நடிப்பும் பேசப்பட்டது. தனுசுடன் நடித்த ‘நையாண்டி’ படம் சரியாகப் போகாவிட்டாலும், இவருக்கான வாய்ப்புகளில் எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்தவில்லை. நடிகர் ஜெய்யுடன் இவர் சேர்ந்து நடித்த ‘திருமணம் எனும் நிக்காஹா’ படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கினாலும் ‘நீ நல்லா வருவடா’, ‘வாய் மூடி பேசவும்’ என அடுத்தடுத்த படங்களில் பிஸியாகவே இருக்கிறார் நஸ்ரியா.
- தி இந்து, 27-12-2013
சிவ கார்த்திகேயன்
பெரிய திரையில் ஜொலித்து ரிட்டயர்மென்ட் ஆன பிறகு சின்னத்திரை பற்றி நினைக்கும் தமிழகச் சினிமா நட்சத்திரங்களின் எண்ணத்தைச் சிதறடித்தவர் சிவ கார்த்திகேயன். மிமிக்ரி கலைஞராகத் தோன்றியத் தொலைக்காட்சியிலேயே நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி, அங்குத் தனக்கெனத் தனிப் பாணியை உருவாக்கி, இன்று பெரிய திரையில் வெற்றிக்கொடி கட்டியவர் இந்த நாயகன்.
கடந்த ஆண்டு ‘மெரினா’ படத்தில் அறிமுகமானபோது பத்தோடு பதினொன்று என நினைத்தவர்கள்கூட இன்று அவரது கேரியர் கிராப் மேலே ஏறி வருவதைப் பார்த்து வாயடைத்து நிற்கிறார்கள். ஓர் ஆண்டில் ஒரு வெற்றிப் படம் கொடுக்கவே பெரிய நட்சத்திரங்கள் மல்லுக்கட்டும் இந்தக் காலகட்டத்தில் ‘எதிர்நீச்சல்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என இரு வெற்றிப்படங்களைக் கொடுத்து அமைதியாகப் பயணிக்கிறார் இந்த நாயகன்.
காமெடி என்ற பலத்தோடு சினிமாவுக்குள் நுழைந்த சிவ கார்த்திகேயன் அந்த இமேஜில் இருந்து வெளி வர மெனக்கெடுவதும் இப்போது தெரிகிறது. அது அவருக்குச் சாதகமாகப் பாதகமா என்பது போகப் போகத்தான் தெரிய வரும். ‘மான் கராத்தே’, ‘அந்த ஒன்னுதான் இது’ என அடுத்த ஆண்டிலும் நிறையப் படங்கள் கைவசம் வைத்திருக்கும் சிவ கார்த்திகேயன் இந்த ஆண்டில் பிராகசித்த கலைஞனாக மின்னுகிறார்.
விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் இப்போது பிசியான நடிகர் யார் தெரியுமா? அது விஜய்
சேதுபதிதான். ‘சுந்தரபாண்டியன்’ படத்தைத் தொடர்ந்து ‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சூது கவ்வும்’ எனத் தொடர்ச்சியாக ஹாட்ரிக் ஹிட் அடித்த விஜய் சேதுபதியின் கைவசம் தற்போது 5-க்கும் மேற்பட்ட படங்கள். இன்னும் பல படங்களில் ஒப்பந்தமாகிக் கொண்டு இருக்கிறார்.
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்று சொல்வார்கள். இதற்கு நல்ல உதாரணம் விஜய் சேதுபதி. 2010-ம் ஆண்டில் வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு முன்பு வரை 5 ஆண்டுகளுக்கும் மேலாக, இவர் பல படங்களில் சிறு வேடங்களில் நடித்தவர்.
அந்த அனுபவத்தையே களமாக அமைத்துக்கொண்டு வேகமாக முன்னேறி வருகிறார்.
தற்போது பாப்புலராக உள்ள இளம் இயக்குநர்கள் இயக்கும் படங்களில் நடிக்கவே முன்னணி ஹீரோக்கள் ஆர்வம் காட்டு நிலையில், விஜய் சேதுபதி மட்டும் விதிவிலக்காகச் செயல்படுகிறார். சீனியர் இயக்குநர்களின் இணை, துணை மற்றும் குறும்படங்களின் இயக்குநர்கள்தான் இவரது சாய்ஸ்.
முன்னணி ஹீரோக்களுடன் இரட்டையர்களில் ஒருவராகவும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவும் தயாராக இருப்பதாகக் கூறும் விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாதக் கலைஞனாக உருவெடுத்து வருகிறார்.
விக்ரம் பிரபு
நடிகர் திலகத்தின் பேரன், இளைய திலகத்தின் மகன் என்ற பெருமையோடு சினிமாவுக்குள் நுழைந்த விக்ரம் பிரபு, தாத்தா, அப்பாவின் பெயரைக் காப்பாற்றத் தவறவில்லை. தாத்தா போலவே பேரன் விக்ரம் பிரபுவுக்குக் ‘கும்கி’ வெற்றிப் படமாக அமைந்தது இவருக்கு அதிர்ஷ்டம் என்றே சொல்லலாம். அழுத்தமான கதை, விறுவிறுப்பான திரைக்கதை, சிறந்த இயக்கம், வருடும் இசை எனச் சம விகிதத்தில் கலந்த ‘கும்கி’ப் படத்தில் யானைப் பாகன் பொம்மனாக மிளிர்ந்தார் விக்ரம் பிரபு.
முதல் படம் வெற்றியாக அமைந்து அவருக்கு யானைப் பலம் கொடுத்தது என்றால், ஓராண்டு கழித்து இப்போது வேற மாதிரியாக வந்திருக்கிறார் விக்ரம் பிரபு. சமகாலத்தில் நீதிமன்றத்தில் நிகழ்ந்த கலவரத்தை ஒன் லைனாக கொண்ட கதையில் கோபம் கொப்பளித்திருக்கிறார் விக்ரம் பிரபு. வர்த்தக ரீதியாக வெற்றி பட்டியலில் இந்தப் படத்துக்கும் நிச்சயம் இடம் இருக்கும்.
இரு படங்களைக் கடந்து அடுத்த கட்டமாக ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற ரீமேக் படத்தில் இறங்கியிருக்கிறார் விக்ரம் பிரபு.
விஜயகாந்துக்குப் பெயர் பெற்றுக்கொடுத்த இந்தப் படம் விக்ரம் பிரபுவுக்கும் பெயர் கொடுக்கலாம். நடிப்பையும், சினிமாவையும் கடலளவு நேசிக்கும் குடும்பத்தில் இருந்து வந்த இந்த மீன் குஞ்சுக்கு, நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன?
லட்சுமி மேனன்
கோடம்பாக்கத்தில் இப்போது அதிகம் உச்சரிக்கப்படும் பெயர் லட்சுமி மேனன்.
பாவாடை, தாவணியைத் தமிழ் நாட்டு இளம் பெண்களே மறந்து விட்ட இந்தக் காலத்தில் பாவாடை, தாவணியில் தொடர்ந்து 3 படங்களில் நடித்து இளைஞர்களின் மனதில் சம்மணம் போட்டு அமர்ந்திருக்கிறார் லட்சுமி.
அறிமுகப்படம் வெற்றி பெற்றாலே தலைகால் புரியாத திரையுலகில் வரிசையாகச் ‘ சுந்தரப்பாண்டியன்’, ‘கும்கி’, ‘குட்டிப்புலி’, ‘பாண்டிய நாடு’ என நான்கு வெற்றி படங்களில் நடித்தும் அலட்டிக்கொள்ளாத நடிகை. தொடர்ந்து ‘மஞ்சப்பை’, ‘ஜிகர்தண்டா’, ‘சிப்பி’, ‘வசந்தகுமாரன்’ என 4 படங்கள் இவரது கைவசம் உள்ளன.
சினிமாவில் நிலை நிறுத்திக்கொள்ளக் கிளாமர் எனும் ஆயுதத்தை ஏந்தாமல் இருப்பது பெண்கள் மத்தியிலும் லட்சுமிக்கு ரசிகைகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. நடிப்புக்கு இடையேயும் பள்ளிப் படிப்பையும் விடாமல் ஆச்சரியம் தரும் லட்சுமி மேனன் நம்பிக்கை நட்சத்திரமாகக் காட்சியளிக்கிறார்.
நஸ்ரியா
நடிகர் சிவ கார்த்திகேயன் போலச் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் நஸ்ரியா. அழகும் திறமையும் உள்ள நடிகை. மலையாளப் படங்களில் இவர் நடித்திருந்தாலும், தமிழ் படத்தில் நடித்த ‘நேரம்’ இவருக்குப் நல்ல நேரமாகவே அமைந்தது என்று சொல்லலாம். இவர் தேர்ந்தெடுக்கும் படங்களுக்காகவே இவரை நிச்சயம் பாராட்டலாம்.
அறிமுகமான நேரம் திரைப்படம் நடிப்புக்கு முக்கியத்துவமுள்ள நாயகியாக நஸ்ரியாவை அடையாளம் காட்டியது. அடுத்த படமான ‘ராஜா ராணி’ படத்தில் நயன்தாராவுக்கு இணையாக இவரது நடிப்பும் பேசப்பட்டது. தனுசுடன் நடித்த ‘நையாண்டி’ படம் சரியாகப் போகாவிட்டாலும், இவருக்கான வாய்ப்புகளில் எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்தவில்லை. நடிகர் ஜெய்யுடன் இவர் சேர்ந்து நடித்த ‘திருமணம் எனும் நிக்காஹா’ படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கினாலும் ‘நீ நல்லா வருவடா’, ‘வாய் மூடி பேசவும்’ என அடுத்தடுத்த படங்களில் பிஸியாகவே இருக்கிறார் நஸ்ரியா.
- தி இந்து, 27-12-2013