
‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங் கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நமீபியா, பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளும், ‘பி’ பிரிவில் பங்களாதேஷ், கனடா, கென்யா, நியூசிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றன. லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான், இங்கிலாந்து, ‘பி’ பிரிவில் போட்டியை நடத்திய தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சூப்பர் சிக்ஸ்க்குக்கூட தகுதி பெறாமல் பரிதாபமாக வெளியேறின.
ஆஸ்திரேலியா, இந்தியா, கென்யா, நியூசிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் விளையாடிய சூப்பர் சிக்ஸ் சுற்றில், ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் சுலபமாக அரையிறுதிக்கு தகுதிப்
பெற்றன. 3 மற்றும் 4-வது இடங்களை முறையே இலங்கையும், கத்துக்குட்டி அணியான கென்யாவும் தட்டுதடுமாறி பிடித்தன.
முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவும் இலங்கையும் மல்லுக்கட்டின. 212 ரன் என ஆஸ்திரேலியா நிர்ணயித்த எளிய இலக்கை விரட்டிய இலங்கை, 123 ரன் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அப்போது மழை குறுகிட, டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 48 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இன்னொரு அரையிறுதியில் இந்தியாவும் கென்யாவும் மோதின. இந்தியா நிர்ணயித்த 270 ரன் என்ற இலக்கை விரட்டிய கென்யா, 179 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. 1983-க்கு பிறகு இரண்டாவது முறையாக சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்று அசத்தியது.
மார்ச் 24 அன்று ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்த இறுதியாட் டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, அதிரடியாக விளையாடி 359 ரன்களைக் குவித்தது. இலக்கை விரட்டிய இந்திய அணி, பதிலடி கொடுக்க முடியாமல் 234 ரன்னுக்கெல்லாம் ஆல்அவுட் ஆகி 2வது முறையாக கோப்பை வெல்லும் என்ற கனவை கலைத்தது. 1987, 1999-க்கு பிறகு மூன்றாவது முறையாக உலகக்கோப்பையைக் கைப்பற்றி சாதனைப் படைத்தது ஆஸ்திரேலியா.
2003 ரீவைண்ட்
அரசியல் பிரச்னை காரணமாக இங்கிலாந்து அணி, ஜிம்பாப்வே சென்று விளையாட மறுத்தது. இதனால், ஜிம்பாப்வே அணி விளையாடமலேயே புள்ளிகள் பெற்றது. இதற்கான பலனை இங்கிலாந்து நன்றாகவே அனுபவித்தது. சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு ஜிம்பாப்வே தகுதிப் பெற, இங்கிலாந்து மூட்டை கட்டியது.
இத்தொடரில் சச்சின் டெண்டுல்கர் 673 ரன் குவித்து புதிய சாதனைப் படைத்தார். தொடர் நாயகன் விருதையும் அவரே தட்டிச் சென்றார்.

தென்ஆப்பிரிக்கா 229 ரன் மட்டுமே எடுத்தது. இதனால், இந்த போட்டி ‘டை’யில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இத்தொடரில் சவுரவ் கங்குலி 3 சதங்கள் விளாசி சாதனைப் படைத்தார்.
- முத்தாரம், 2011 பிப்ரவரி
No comments:
Post a Comment