2015-ம் ஆண்டில் தொடங்கி 2017-ம் ஆண்டு இறுதிவரை இந்திய கிரிக்கெட் அணி தேனிலவு காலத்தில் இருந்தது. தொடர்ந்து உள்நாட்டு கிரிக்கெட் தொடர்கள், பலமில்லாத இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடனான வெளிநாட்டுத் தொடர்கள் என இந்த மூன்று ஆண்டுகளில் இந்திய அணி எதிரணிகளைத் துவம்சம் செய்துகொண்டிருந்தது. ஆனால், 2018-ம் ஆண்டில் தொடங்கிய சோதனைக் காலத்தில் சிக்கி இந்திய கிரிக்கெட் அணி தற்போது திணறிக்கொண்டிருக்கிறது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிதான் உலகின் நம்பர் ஒன் அணி. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் பெருமையைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த பெருமைக்கு ஏற்ப இந்திய அணி வெளிநாடுகளில் விளையாடுகிறதா என்றால், நிச்சயமாக இல்லை. 2015-ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்தது. தோல்வியை நோக்கி டெஸ்ட் தொடர் நகர்ந்ததைக் கண்டு வேகவேகமாக டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் மட்டுமல்லாமல், டெஸ்ட் போட்டிகளிலிருந்தே விலகினார் டோனி. இதில் காரணம் இல்லாமல் இல்லை. 2011-ம் ஆண்டில் இங்கிலாந்தில் 4-0, 2011-12-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் 4-0, 2014-ம் ஆண்டில் இங்கிலாந்தில் 1-3 என மூன்று வெளிநாட்டு தொடர்களில் மண்ணைக் கவ்வியதே டோனி பதவி விலகக் காரணமாக இருந்தது.
இப்போது டோனியின் கேப்டன் கதை ஏன் என்று நினைக்கலாம். இருக்கிறது, டோனி விட்ட இடத்திலிருந்துதான் கோலியின் கதையும் தொடங்குகிறது. 2015-ம் ஆண்டில் டோனி அவசரம் அவசரமாகப் பதவி விலகிய பிறகு எஞ்சிய டெஸ்ட் போட்டிகளுக்கு விராட் கோலிதான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவர் கேப்டனாக இருந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒரு தோல்வி, ஒரு டிரா செய்தார். தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. விராட் கோலி கேப்டனாகப் பதவியேற்பதற்கு முன்பு இந்தியா கண்ட தோல்வி இந்தத் தொடர் மட்டும்தான்.
இந்த டெஸ்ட் தோல்விக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணி விஸ்வரூபம் எடுத்தது.
அதாவது, 9 டெஸ்ட் தொடர்களைத் தொடர்ச்சியாக வென்றது. இதில் 6 டெஸ்ட் தொடர்கள் இந்தியாவில் நடைபெற்றவை. வெறும் மூன்று தொடர்கள் மட்டுமே வெளிநாட்டுத் தொடர்கள். இலங்கையில் இரண்டு டெஸ்ட் தொடர், வெஸ்ட் இண்டீஸில் ஒரு டெஸ்ட் தொடர் என பலவீனமான டெஸ்ட் அணிகளுடன் மட்டுமே இந்தியா விளையாடியது. உள்நாட்டில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என பலமான அணிகளை எளிதாக நசுக்கியது இந்தியா.
2015-ம் ஆண்டிலிருந்து 2017-ம் ஆண்டுவரை தொடர் டெஸ்ட் வெற்றிகளால் நம்பர் ஒன் டெஸ்ட் அணி என்ற அங்கீகாரமும் இந்தியாவுக்குக் கிடைத்தது. இதெல்லாம் கடந்த ஆண்டு டிசம்பருடன் முடிந்தது. 2018-ம் ஆண்டில் இந்தியாவுக்கு முதல் சோதனை காத்திருந்தது. தென்னாப்பிரிக்கா சென்று 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று, 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது இந்தியா. ஜோகன்னர்ஸ்பர்க்கில் நடந்த டெஸ்ட்டில் மட்டும் வெற்றியடைந்து இந்தியா ஆறுதல் தேடிக்கொண்டது. தென்னாப்பிரிக்காவைத் தொடர்ந்து அடுத்த வெளிநாட்டுத் தொடராக இங்கிலாந்து தொடர் வந்தது.
உண்மையில் இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பு இங்கிலாந்தை இந்தியா எளிதாக வெற்றிக்கொள்ளும் என்றே முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் உள்பட பலரும் சொல்லிவந்தார்கள். ஏனெனில் கடந்த மூன்று ஆண்டுகாலமாக இந்திய அணி டெஸ்ட்டில் ஆதிக்கம் செலுத்தியதால், இந்த எதிர்பார்ப்பு இருந்தது. தவிர, இங்கிலாந்து அணியும் அத்தனை பலமான அணியாகவும் விளங்கவில்லை. ஆனால், அந்த எதிர்பார்ப்பை ஒட்டுமொத்தமாகச் சிதைத்த இந்திய அணி, 1-4 என்ற டெஸ்ட் கணக்கில் தொடரை இழந்துவந்திருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரை இந்தியா 3-2 என்ற கணக்கில் வென்றிக்க வேண்டும்.
எட்ஸ்பாஸ்டன், சவுதாம்டன் டெஸ்ட் போட்டிகளை இந்திய அணி சுலபமாக வெற்றிக்கொள்ள வாய்ப்புகள் இருந்தன. எட்ஸ்பாஸ்டனில் 194 ரன்களைகூடத் துரத்தி விரட்டிப் பிடிக்க முடியாமல் தோல்வியைச் சந்தித்த இந்தியா, சவுதாம்டன் டெஸ்டை 60 ரன்களில் கோட்டைவிட்டது. மிக எளிதான இலக்கைக் கூட எட்ட முடியாமல், துரத்தலில் அடைந்த தோல்வியால் இந்தியா சரண்டர் ஆனது. விளைவு, இந்தத் தொடரை படுமோசமாக இழந்திருக்கிறது.
‘உள்நாட்டில் புலி; வெளிநாட்டில் எலி’ என்று இந்திய டெஸ்ட் அணியைக் காலங்காலமாக கிண்டலடிப்பது வாடிக்கை. அன்று முதலே இந்திய அணி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் பெரிதாக முத்திரை பதித்ததில்லைதான். ஆனால், ‘கடந்த 15, 20 ஆண்டுகளில் இப்போதிருக்கும் இந்திய அணிதான் சிறந்தது’ என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகிறார் என்றால், அதை செயலில் காட்டியிருக்க வேண்டாமா?
கடந்த 2006-07-ம் ஆண்டில் இங்கிலாந்தில் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. அதற்கு முன்பாக 2002-ல் கங்குலி தலைமையிலான அணி 1-1 என்ற தொடரை சமன் செய்தது. அதற்கும் முன்பாக 1986-ம் ஆண்டில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை இங்கிலாந்தில் வென்றது.
பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுவதைப்போல இப்போதிருக்கும் அணி முந்தைய அணியுடன் நெருங்கி வரும் அளவுக்குக்கூட செயல்படவில்லை என்பதே உண்மை. இந்த ஆண்டு தென்னாப்பிரிக்கா சென்று இந்தியா தோல்வியுடன் திரும்பியது. இப்போது இங்கிலாந்திலும் அதே கதிதான்.
அடுத்து இந்த நவம்பரில் இந்திய அணி ஆஸ்திரேலியா செல்ல உள்ளது.
ஆஸ்திரேலியாவையாவது இந்தியா வெற்றிக்கொள்ளுமா என்று ஊகிப்பதெல்லாம் மிகவும் கடினம்தான். தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என இரண்டு தொடர்களிலுமே இந்திய பந்துவீச்சாளர்கள் அந்த நாட்டு பந்துவீச்சாளர்களின் தரத்துக்கு பந்துவீசி திணறடித்தார்கள். ஆனால், பேட்ஸ்மேன்களில் விராட் கோலியைத் தவிர பிற ஆட்டக்காரர்கள் தங்கள் தரத்தை ஒரு படிகூட மேலே உயர்த்திக்கொள்ளவில்லை. அதுதொடரும்வரை, வெளிநாட்டில் சாதிப்பதையெல்லாம் கொஞ்சம் எதிர்பார்க்க முடியாது.
இந்தியா உள்நாட்டில் புலியாக இருப்பதுபோல ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அவர்கள் ஊரில் புலியாக இருக்கிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், அந்த அணிகள் இந்தியாவில் நிச்சயம் ஒரு டெஸ்ட் தொடரையாவது வென்றுக்காட்டியிருக்கிறார்கள். இந்தியாவுக்குக் குறிப்பிட அப்படி எந்த வெற்றியும் இங்கே இல்லை!
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிதான் உலகின் நம்பர் ஒன் அணி. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் பெருமையைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த பெருமைக்கு ஏற்ப இந்திய அணி வெளிநாடுகளில் விளையாடுகிறதா என்றால், நிச்சயமாக இல்லை. 2015-ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்தது. தோல்வியை நோக்கி டெஸ்ட் தொடர் நகர்ந்ததைக் கண்டு வேகவேகமாக டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் மட்டுமல்லாமல், டெஸ்ட் போட்டிகளிலிருந்தே விலகினார் டோனி. இதில் காரணம் இல்லாமல் இல்லை. 2011-ம் ஆண்டில் இங்கிலாந்தில் 4-0, 2011-12-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் 4-0, 2014-ம் ஆண்டில் இங்கிலாந்தில் 1-3 என மூன்று வெளிநாட்டு தொடர்களில் மண்ணைக் கவ்வியதே டோனி பதவி விலகக் காரணமாக இருந்தது.
இப்போது டோனியின் கேப்டன் கதை ஏன் என்று நினைக்கலாம். இருக்கிறது, டோனி விட்ட இடத்திலிருந்துதான் கோலியின் கதையும் தொடங்குகிறது. 2015-ம் ஆண்டில் டோனி அவசரம் அவசரமாகப் பதவி விலகிய பிறகு எஞ்சிய டெஸ்ட் போட்டிகளுக்கு விராட் கோலிதான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவர் கேப்டனாக இருந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒரு தோல்வி, ஒரு டிரா செய்தார். தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. விராட் கோலி கேப்டனாகப் பதவியேற்பதற்கு முன்பு இந்தியா கண்ட தோல்வி இந்தத் தொடர் மட்டும்தான்.
இந்த டெஸ்ட் தோல்விக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணி விஸ்வரூபம் எடுத்தது.
அதாவது, 9 டெஸ்ட் தொடர்களைத் தொடர்ச்சியாக வென்றது. இதில் 6 டெஸ்ட் தொடர்கள் இந்தியாவில் நடைபெற்றவை. வெறும் மூன்று தொடர்கள் மட்டுமே வெளிநாட்டுத் தொடர்கள். இலங்கையில் இரண்டு டெஸ்ட் தொடர், வெஸ்ட் இண்டீஸில் ஒரு டெஸ்ட் தொடர் என பலவீனமான டெஸ்ட் அணிகளுடன் மட்டுமே இந்தியா விளையாடியது. உள்நாட்டில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என பலமான அணிகளை எளிதாக நசுக்கியது இந்தியா.
2015-ம் ஆண்டிலிருந்து 2017-ம் ஆண்டுவரை தொடர் டெஸ்ட் வெற்றிகளால் நம்பர் ஒன் டெஸ்ட் அணி என்ற அங்கீகாரமும் இந்தியாவுக்குக் கிடைத்தது. இதெல்லாம் கடந்த ஆண்டு டிசம்பருடன் முடிந்தது. 2018-ம் ஆண்டில் இந்தியாவுக்கு முதல் சோதனை காத்திருந்தது. தென்னாப்பிரிக்கா சென்று 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று, 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது இந்தியா. ஜோகன்னர்ஸ்பர்க்கில் நடந்த டெஸ்ட்டில் மட்டும் வெற்றியடைந்து இந்தியா ஆறுதல் தேடிக்கொண்டது. தென்னாப்பிரிக்காவைத் தொடர்ந்து அடுத்த வெளிநாட்டுத் தொடராக இங்கிலாந்து தொடர் வந்தது.
உண்மையில் இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பு இங்கிலாந்தை இந்தியா எளிதாக வெற்றிக்கொள்ளும் என்றே முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் உள்பட பலரும் சொல்லிவந்தார்கள். ஏனெனில் கடந்த மூன்று ஆண்டுகாலமாக இந்திய அணி டெஸ்ட்டில் ஆதிக்கம் செலுத்தியதால், இந்த எதிர்பார்ப்பு இருந்தது. தவிர, இங்கிலாந்து அணியும் அத்தனை பலமான அணியாகவும் விளங்கவில்லை. ஆனால், அந்த எதிர்பார்ப்பை ஒட்டுமொத்தமாகச் சிதைத்த இந்திய அணி, 1-4 என்ற டெஸ்ட் கணக்கில் தொடரை இழந்துவந்திருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரை இந்தியா 3-2 என்ற கணக்கில் வென்றிக்க வேண்டும்.
எட்ஸ்பாஸ்டன், சவுதாம்டன் டெஸ்ட் போட்டிகளை இந்திய அணி சுலபமாக வெற்றிக்கொள்ள வாய்ப்புகள் இருந்தன. எட்ஸ்பாஸ்டனில் 194 ரன்களைகூடத் துரத்தி விரட்டிப் பிடிக்க முடியாமல் தோல்வியைச் சந்தித்த இந்தியா, சவுதாம்டன் டெஸ்டை 60 ரன்களில் கோட்டைவிட்டது. மிக எளிதான இலக்கைக் கூட எட்ட முடியாமல், துரத்தலில் அடைந்த தோல்வியால் இந்தியா சரண்டர் ஆனது. விளைவு, இந்தத் தொடரை படுமோசமாக இழந்திருக்கிறது.
‘உள்நாட்டில் புலி; வெளிநாட்டில் எலி’ என்று இந்திய டெஸ்ட் அணியைக் காலங்காலமாக கிண்டலடிப்பது வாடிக்கை. அன்று முதலே இந்திய அணி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் பெரிதாக முத்திரை பதித்ததில்லைதான். ஆனால், ‘கடந்த 15, 20 ஆண்டுகளில் இப்போதிருக்கும் இந்திய அணிதான் சிறந்தது’ என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகிறார் என்றால், அதை செயலில் காட்டியிருக்க வேண்டாமா?
கடந்த 2006-07-ம் ஆண்டில் இங்கிலாந்தில் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. அதற்கு முன்பாக 2002-ல் கங்குலி தலைமையிலான அணி 1-1 என்ற தொடரை சமன் செய்தது. அதற்கும் முன்பாக 1986-ம் ஆண்டில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை இங்கிலாந்தில் வென்றது.
பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுவதைப்போல இப்போதிருக்கும் அணி முந்தைய அணியுடன் நெருங்கி வரும் அளவுக்குக்கூட செயல்படவில்லை என்பதே உண்மை. இந்த ஆண்டு தென்னாப்பிரிக்கா சென்று இந்தியா தோல்வியுடன் திரும்பியது. இப்போது இங்கிலாந்திலும் அதே கதிதான்.
அடுத்து இந்த நவம்பரில் இந்திய அணி ஆஸ்திரேலியா செல்ல உள்ளது.
ஆஸ்திரேலியாவையாவது இந்தியா வெற்றிக்கொள்ளுமா என்று ஊகிப்பதெல்லாம் மிகவும் கடினம்தான். தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என இரண்டு தொடர்களிலுமே இந்திய பந்துவீச்சாளர்கள் அந்த நாட்டு பந்துவீச்சாளர்களின் தரத்துக்கு பந்துவீசி திணறடித்தார்கள். ஆனால், பேட்ஸ்மேன்களில் விராட் கோலியைத் தவிர பிற ஆட்டக்காரர்கள் தங்கள் தரத்தை ஒரு படிகூட மேலே உயர்த்திக்கொள்ளவில்லை. அதுதொடரும்வரை, வெளிநாட்டில் சாதிப்பதையெல்லாம் கொஞ்சம் எதிர்பார்க்க முடியாது.
இந்தியா உள்நாட்டில் புலியாக இருப்பதுபோல ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அவர்கள் ஊரில் புலியாக இருக்கிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், அந்த அணிகள் இந்தியாவில் நிச்சயம் ஒரு டெஸ்ட் தொடரையாவது வென்றுக்காட்டியிருக்கிறார்கள். இந்தியாவுக்குக் குறிப்பிட அப்படி எந்த வெற்றியும் இங்கே இல்லை!