நேருவுடன் சூயென்லாய் |
1962ம் ஆண்டில் சீன பிரதமர் சூயென்லாய் இந்தியாவுக்கு வந்து சென்ற ஒரு வார காலத்திற்குள்ளாக யாருமே எதிர்பார்க்காத வேளையில் இந்தியா மீது போரைத் தொடுத்துது அந்த நாடு. இப்போதும் அப்படித்தான். எல்லையில் அத்துமீறி நுழைவது, இந்தியாவின் கண்காணிப்பு சாதனங்களை சேதப்படுத்துவது, இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்கு போலிப் பொருட்களை அனுப்புவது என தொடர்கிறது. இந்தியா மீது சீனாவுக்கு அப்படி என்ன கோபம், வெறுப்பு..?
1949ம் ஆண்டில் சீனா குடியரசு நாடாக உருவானது. அதை முதலில் அங்கீகரித்த நாடு இந்தியதான். 1950ம் ஆண்டில் கொரிய போரில் சீனா மூக்கை நுழைத்த போது உலக நாடுகளின் கண்டனத்திற்கு ஆளானது. அப்போது கூட சீனாவுக்கு ஆதரவாகவே இருந்தது இந்தியா. இப்படி வெளிப்படையாக தனது ஆதரவையும், நட்பையும் வெளிப்படுத்திய இந்தியாவுக்கு சீனா கொடுத்த பரிசு என்ன தெரியுமா? நம்பிக்கைத் துரோகம்!
இந்தியா - சீனா - திபெத் நாடுகளின் எல்லைக்கோட்டுப் பகுதியாக மக்மோஹன் எல்லைக்கோடு உள்ளது. 1951ம் ஆண்டில் திபெத் மற்றும் ஜின்ஜியாங் பகுதிகளுக்கு இடையே 1200 கி.மீ. தொலைவுக்குச் சாலை அமைத்தது சீனா. அந்த சாலை இந்திய எல்லைப் பகுதியான அக்ஸாய்சின் வரை நீண்டது.
1954ம் ஆண்டில் சீனா வெளியிட்ட அந்நாட்டு வரைப்படத்தில் 1,20,000 சதுர கி.மீ. இந்தியப் பகுதிகளை இணைத்து வெளியிட்டது. காஷ்மீரில் அக்ஸாய்சின், சிக்கிம், அருணாச்சலப்பிரதேசத்தையும் (இது தெற்கு திபெத்தாம்!) தங்கள் நாட்டின் பகுதியாக காட்டியது. அந்த காலகட்டத்தில் அக்ஸாய்சின் பகுதியில் சில இடங்களை சீனா ஆக்கிரமிக்கவும் செய்தது. பின்னர் இரு நாடுகளின் எல்லைப் பிரச்னை பஞ்ச சீலக் கொள்கையின் மூலம் தீர்க்க முடிவு செய்யப்பட்டது.
50 ஆண்டுகளுக்கு முன்பு திபெத் மீது படையெடுத்தது சீனா. தனி நாடாக இருந்த திபெத்தை தங்கள் நாட்டின் பகுதியாக சீனா அறிவித்தது. இந்தியாவிடம் அடைக்கலாம் கேட்டார் திபெத் தலைவரான தலாய் லாமா. இந்தியாவுக்கு அவருக்கு அடைக்கலம் அளித்தது. தலாய் லாமாவை ஒப்படைக்கும்படி இந்தியாவை சீனா வற்புறுத்தியும் பயனில்லாமல் போகவே, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு பின் இரு நாடுகளும் இரு துருவங்களாகின.
1962ம் செப்டம்பர் 19 அன்று இந்தியா மீது போர் தொடுத்தது சீனா. காஷ்மீரில் அக்ஸாய்சின் , அருணாச்சலப்பிரதேச எல்லைப் பகுதியில்போர் உச்சக்கட்டத்தை எட்டியது. ஏற்கனவே இந்திய எல்லைப் பகுதியை ஆக்கிமித்திருந்த சீனா, மேலும் முன்னேறி இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்தது. அஸ்ஸாம் மாநிலத்தில் தேஜ்பூர் வரை சீனப்படையினர் முன்னேறினர்.
![]() |
1962 போர்க் களத்தில் நேரு |
சர்வதேச நாடுகளின் நெருக்கடியை அடுத்து போரை நிறுத்திக் கொண்டது சீனா. இந்தப் போரில் 33 ஆயிரம் சதுர கி.மீ. நிலப்பகுதியை சீனாவிடம் இழந்தது இந்தியா.
‘‘சீனாவின் பழைய பகுதிகளை ஏற்கனவே இந்திய ராணுவம் கைப்பற்றி இருந்தது. அவர்களை பழைய இடத்துக்கு விரட்டும் நோக்கம் நிறைவேறி விட்டது. மீண்டும் இந்தியா ஆக்கிரமிப்பு செய்தால் தாக்குவோம்‘‘ என்று அறிவிப்பு வெளியிட்டது சீனா.
ஆனால் ‘‘இந்தியாவுடனான போர் மக்மோஹன் எல்லை பற்றியது அல்ல, திபெத் பற்றியது‘‘ என விளக்கம் அளித்தார் அந்நாட்டு தேசியத் தலைவர் மா சே துங்.
இந்தியாவுடன் நேரடியாக மோதிய சீனா போருக்குப் பின் தந்திர வேலைகளையும் கச்சிதமாகச் செய்ய ஆரம்பித்தது. இந்தியாவை எதிரியாகக் கருதும் பாகிஸ்தானுக்கு ஏராளமான நிதி, தொழில்நுட்ப, ஆயுத உதவிகளைச் செய்வது, இந்தியாவில் உள்ள பிரிவினை சக்திகளுக்கு நிதி உதவி அளிப்பது, விடுதலைப்புலிகளை ஒடுக்குதல் என்ற போர்வையிலும், போருக்குப் பின் உதவி என்ற பெயரிலும் இலங்கைக்கு உதவி செய்து இந்தியாவுக்கு எதிராக தளம் அமைத்து வருவது, மியான்மருடன் நெருங்கிய உறவு வைத்து இந்திய வளர்ச்சிக்கு செக் வைப்பது என சீனாவின் சூழ்ச்சிகள் இன்னும் தொடர்கின்றன.
சமீப காலமாக இந்திய எல்லைப் பகுதியில் நேரடியாகவே அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது சீனா. இந்திய எல்லைப் பகுதியில் ஹெலிகாப்டரில் பறப்பது, எல்லையில் சிவப்பு வண்ணத்தில் சீனா எழுதி வைப்பது, இந்தியாவின் கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் கேமராக்களை சேதப்படுத்துவது, காஷ்மீர் எல்லைப்பகுதியான காரகோரத்தில் வாழும் கிராம மக்களை மிரட்டி விரட்டுவது என அத்துமீறல்கள் தொடர்கின்றன.
எல்லைப்பகுதியில் விளையாட்டு காட்டிய சீனா அடுத்தகட்டமாக இந்தியப் பொருளாதாரம் மீது போரை ஏவி வருகிறது. பொருளாதார ரீதியாக இந்தியா வளர்ச்சியடைந்துவிடக்கூடாது என்பதற்காக போலி பொருட்களை உற்பத்தி செய்து ‘மேட் இன் இந்தியா’ என உலக நாடுகளில் விற்பனை செய்து வருகிறது என நீண்ட பல ஆண்டுகளாகவே குற்றச்சாட்டுகள் உள்ளன. சர்வதேச அடையாள குறிப்பெண்கள் இல்லாமல் பால் பொருட்கள், மருந்துகள், செல்போன், பொம்மைகள், எலக்ட்ரானிக் பொருட்களை அனுப்பி வைத்து நம் பொருளாதார வளரச்சியை அசைத்துப் பார்க்கும் வேலையிலும் இறங்கியுள்ளது சீனா.
இதற்கெல்லாம் காரணம்? எந்த ரூபத்திலும் ஆசியாவின் வல்லரசு என்ற
![]() | |
இந்திய-சீன எல்லை |
று குறிப்பிட்டு இருந்தார். ஜாதி, இனம், மொழி, கலாசாரம் என பிரிந்து கிடந்தாலும் நாட்டுப் பற்றை வெளிப்படுத்துவதில் இந்தியர்களை அடித்துக் கொள்ள ஆட்களே இல்லை.. இது சீனர்களுக்கு புரியவில்லை.. அய்யோ பாவம்!
- முத்தாரம், 22-09-2009